சென்னையில் எட்டாவது உலகத் தமிழாசிரியர் மாநாடு
சென்னை: சென்னையில் எட்டாம் உலகத் தமிழாசிரியர் மாநாடு இன்று தொடங்கியது. இதில் சிங்கப்பூரிலிருந்து 80 ஆசிரியர்களும் மலேசியாவிலிருந்து ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆசிரியர்களும், இலங்கை, லண்டனிலிருந்தும் ஏராளமான ஆசிரியர்களும் கலந்து கொண்டுள்ளனர்.
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஏற்பாடு செய்துள்ள இந்த மாநாடு லீ ராயல் மெரிடியன் ஹோட்டலில் இன்றும் நாளையும் நடக்கிறது.
சு.ஈசுவரன் வரவேற்புரையாற்ற, சகாதேவன் தொடக்கவுரையாற்றினார். இதையடுத்து தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மாநாட்டை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
மாநாட்டு மலரைப் பிற்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் வெளியிடுகிறார். சா.அன்பழகன் மாநாட்டு அறிக்கை தாக்கல் செய்கிறார்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஆசிரியர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
மாநாட்டு அமர்வுகளில் முனைவர் மா.நன்னன், எ.சகாதேவன் (மலேசியா), முனைவர் மலையமான், டி.குணசேகரன் (மலேசியா), முனைவர் ச.முத்துக்குமரன், முனைவர் சீத்தாலட்சுமி( சிங்கப்பூர்), க.சிவகுருநாதப் பிள்ளை (இலண்டன்), முனைவர் செல்வரஞ்சிதம் சிவசுப்பிரமணியம் (இலங்கை), விசயராணி (சிங்கப்பூர்), சித்திரன் குருசாமி (சிங்கப்பூர்), ஆறு.அஞ்சப்பன் (சிங்கப்பூர்), பா.தியாகராசன் (சிங்கப்பூர்), இ.கோமதிநாயகம், பூபதி (சிங்கப்பூர்) உள்ளிட்டோர் கருத்தரங்க அமர்வுகளில் தலைமை தாங்குகின்றனர்.
முனைவர் சரளா இராசகோபாலன், முனைவர் மலையமான், புலவர் தி.நா.அறிவொளி, முனைவர் து.சேகர், அருள்செல்வன் இராசு (மலேசியா), அ.கவிதா, முனைவர் கி.மைதிலி, மன்னர்மன்னன் (மலேசியா), முனைவர் வேல்முருகன் (சிங்கப்பூர்), பார்வதி கைலாசம், முனைவர் குமரன் (மலேசியா), இராசப்பன் முத்துலட்சுமி (சிங்கப்பூர்), முனைவர் மு.இளங்கோவன் (புதுச்சேரி), முருகையன், தமிழகன், கல்பனா செல்வராசு, கி.சிற்றம்பலம், முனைவர் ப.அனுராதா, முனைவர் சிவகுமாரன் (சிங்கப்பூர்), சா.கல்பனா (தே.கழகம்) உள்ளிட்ட கட்டுரையாளர்கள் கட்டுரை வழங்குகின்றனர்.
பேராசிரியர் இரா.இளவரசு உள்ளிட்ட தமிழறிஞர்கள் உரையாற்ற உள்ளனர்.
நாளை ஆசிரியம் என்னும் நூல் வெளியீட்டு விழாவும் நடைபெறுகிறது. ஆ.சோதிநாதன் (மலேசியா) வெளியிட, சி.சாமிக்கண்ணு (சிங்கப்பூர்) முதற்படி பெறுகிறார். முனைவர் இராசேந்திரன் (மலேசியா) ஏற்புரையாற்றுகிறார்.
பிற்பகல் 4 மணிக்கு நிறைவு விழா. மாநாட்டு நிறைவுரையும் விருது வழங்கலும் முனைவர் கா.மாரியப்பன் (மேனாள் பள்ளிக்கல்வி இயக்குநர்).பதிவு செய்தவர்கள் மட்டும் கலந்துகொள்ளும் நிகழ்வாக இது இருக்கும்.
-
சென்னையில் இப்தார் நோன்பில் திடீர் திருப்பம்: தேஜ கூட்டணி தலைவர்கள் செய்த "அந்த" காரியம்! திமுக குஷி -
இந்தியாவின் பெரிய ரிங் ரோட்டில்.. வருது ராட்சச ரயில் பாதை.. தமிழக அரசு கிரீன் சிக்னல்! தரமான முடிவு -
தண்ணீர் பாட்டில் 35, டிபன் 50, சென்னை வேட்பாளர்கள் எந்தெந்த பொருட்களுக்கு எவ்வளவு செலவு செய்யலாம் -
சென்னையின் மெகா ப்ராஜெக்ட் இதுதான்! மதுரவாயல் டூ துறைமுகம்.. பறக்கும் சாலையில் காத்திருந்த சர்ப்ரைஸ் -
Gold Price Fall: ஈரான் போருக்கு மத்தியில்! தங்கம் விலை குறைய 5 முக்கிய காரணங்கள் என்னென்ன தெரியுமா? -
15 வருட ஏக்கம்! சென்னை வேளாங்கண்ணி இடையே நேரடி ரயில் சேவை! பயணிகளுக்கு இன்ப அதிர்ச்சி தந்த ரயில்வே -
சென்னை தேர்தல் களத்தில் பிரியாணி கிடையாது? செலவினப் பட்டியலில் விடுபட்டதால் குழப்பம்! -
சென்னை விமான நிலையத்தில் போக்குவரத்து மாற்றம்.. ஸ்தம்பித்த ஜிஎஸ்டி சாலை.. வாகன ஓட்டிகள் கவனம் -
முடங்கிய பணிகள்.. கிளாம்பாக்கம் மெட்ரோவிற்கு ‘பச்சைக்கொடி’ காட்டாத மத்திய அரசு.. எல்லாம் போச்சு -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை?












Click it and Unblock the Notifications