பங்குச் சந்தையில் இன்று துள்ளல்!!
Subscribe to Oneindia Tamil
மும்பை: வாரத்தின் துவக்க நாளான இன்று எடுத்த எடுப்பிலேயே சென்செக்ஸ் மற்றும் நிப்டி குறியீட்டெண்கள் அதிகரித்தன.
ஒரு இடைவெளிக்குப் பிறகு இன்றுதான் தேசிய பங்குச் சந்தை நிப்டி 3000 புள்ளிகளைத் தாண்டியது.
பிற்பகல் 2.30 மணி அளவில் நிப்டியில் 3005 புள்ளிகளில் வர்த்தகம் நடைபெற்று வந்தது.
சென்செக்ஸிலும் நல்ல மாற்றம் இருந்தது.
ஆரம்பத்திலேயே 200 புள்ளிகளுக்கும் மேல் உயர்வு கண்ட சென்செக்ஸ் பிற்பகலில் சற்று இறங்குமுகத்திலிருந்தது.
ஆனால் இப்போதைய நிலவரப்படி 219 புள்ளிகள் கூடுதலாகப் பெற்று 9909 ஆக உள்ளது. இன்றைய வர்த்தகத்தில் ஹிண்டால்கோ, கிராஸிம், டாடா ஸ்டீல், ஓஎன்ஜிசி போன்றவற்றின் பங்குகள் நல்ல விலைக்குப் போயின.
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், டாடா பவர், இன்போஸிஸ் டெக்னாலஜி போன்ற பங்குகள் அதிக சரிவைச் சந்தித்தன.












Click it and Unblock the Notifications