கோரஸுடன் இணைகிறது டாடா?: ஆயிரக்கணக்கானோர் வேலை இழக்கும் அபாயம்!!

Subscribe to Oneindia Tamil

Corus
லண்டன்: செலவைக் குறைக்கும் நடவடிக்கையாக கோரஸ் நிறுவனத்துடன் தனது டாடா ஸ்டீலை இணைக்க வேண்டும் என முடிவெடுத்துள்ளது டாடா நிறுவனம்.

இதனால் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

அதேநேரம், இந்த இணைப்பின் மூலம் ஆர்செலர் மிட்டலுக்குப் பின் உலகின் இரண்டாவது பெரிய ஸ்டீல் உற்பத்தி நிறுவனமாகிறது கோரஸ்-டாடா.

கோரஸ் - டாடா இணைப்பு காரணமாக இங்கிலாந்து முழுவதும் உள்ள பல தொழிற்சாலைகள் மூடப்படும். பல ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழப்பார்கள். மேலும் 10 சதவிகித சம்பளக் குறைப்பும் அமல்படுத்தப்படும். ஆனால் இப்போது இதைச் செய்வதைத் தவிர வேறு வழியில்லை என டாடா ஸ்டீல் நிறுவன அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கைகள் மூலம் 350 மில்லியன் பவுண்டுகள் மிச்சப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதற்கிடையே, ஐரோப்பாவில் உள்ள தங்கள் தொழில் கூடங்கள் மற்றும் கிளைகளை மூடிவிட்டு, விரைவில் சீனாவுக்கு இடம் பெயரவிருப்பதாக கோரஸ் முடிவெடுத்துள்ளதாக லண்டன் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+