திருமங்கலம் இடைத்தேர்தல் தேமுதிகவுக்கு திருப்புமுனை-விஜய்காந்த்

Subscribe to Oneindia Tamil

மதுரை: அதிமுக தொடங்கப்பட்டபோது எம்.ஜி.ஆருக்கு திண்டுக்கல் தொகுதி இடைத்தேர்தல் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது போல திருமங்கலம் தொகுதி இடைத்தேர்தல் தேமுதிகவுக்கு ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தும் என அக் கட்சியின் தலைவர் விஜய்காந்த் கூறினார்.

திருமங்கலம் தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிட தேமுதிகவினர் 40 பேர் விஜய்காந்திடம் விருப்பம் தெரிவித்து மனு கொடுத்துள்ளனர்.

இவர்களிடம் நேர்காணல் நடத்துவதற்காக விஜயகாந்த் இன்று மதுரை வந்தார். கட்சி நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்திய அவர் பின்னர் போட்டியிட விருப்பம் தெரிவித்தவர்களிடம் நேர்காணல் நடத்தினார்.

முன்னதாக நிருபர்களிடம் விஜயகாந்த் பேசுகையில்,

திருமங்கலம் இடைத்தேர் தலில் தே.மு.தி.க. சார்பில் யாரை வேட்பாளராக நிறுத்தலாம் என்பது குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறேன்.

இடைத்தேர்தல் என்றாலே வன்முறை நடக்கத்தான் செய்யும். எல்லோரும் அதனை சந்திக்கத் தான் வேண்டும்.

ஆளும் கட்சியினர் தேர்தலில் வெற்றிபெற எல்லா வேலைகளையும் செய்யத் தான் செய்வார்கள். அதையும் மீறி தேமுதிக வெற்றிக்காக பாடுபடும்.

மதுரை மேற்கு, மத்தி இடைத்தேர்தலின்போது நடந்த வன்முறைபோல் திருமங்கலம் இடைத் தேர்தலிலும் வன்முறை நடக்கக்கூடாது என மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

கடந்த உள்ளாட்சி தேர்தலில் வன்முறைகள் நடந்தன. மதுரை மத்திய தொகுதி, மேற்கு தொகுதி இடைத் தேர்தல்களில் கூட வன்முறை சம்பவங்கள் நடந்தன. இதுகுறித்து புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.

திருமங்கலம் இடைத் தேர்தல் ஏன் அவசர கோலத்தில் நடத்தப்பட வேண்டும்?. ஜனவரி 9ம் தேதிக்கு பதில் 29ம் தேதி என அறிவித்திருக்கலாம். கால அவகாசமாவது கிடைத்திருக்கும்.

கடந்த சட்டசபை தேர்தலின்போது திருமங்கலம் தொகுதியில் தேமுதிக 20,000 ஓட்டுகள் வாங்கியது. இந்த முறை அதிக ஓட்டுகள் வாங்கி வெற்றி பெறுவோம்.

மக்கள் சந்திக்கும் பிரச்சனைகளை முன் வைத்து பிரசாரம் செய்வேன். எனக்கு தொடர்ந்து பல்வேறு மிரட்டல்கள் வந்த வண்ணம் உள்ளன. வேலைவாய்ப்பு முகாம் நடத்தினால்கூட மிரட்டுகிறார்கள். அதற்கு இடம் கொடுக்கக்கூட தடுக்கிறார்கள்.

திமுக மட்டும்தான் நாட்டுக்கு நன்மை செய்கிறது என்று மக்கள் நினைக்க வேண்டும் என்று ஆளும் கட்சியினர் கருதுகின்றனர். மக்களுக்கு தேவையான இதுபோன்ற நல்லது செய்பவர்களை தடுக்கவா முதல்வர் இருக்கிறார்?.

தமிழ்நாடு மக்களை இனியும் கவிதை, கட்டுரைகள் எழுதி ஏமாற்ற முடியாது.

அதிமுக தொடங்கப்பட்டபோது எம்.ஜி.ஆருக்கு திண்டுக்கல் தொகுதி இடைத்தேர்தல் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது. அதுபோல திருமங்கலம் தொகுதி இடைத்தேர்தல் தேமுதிகவுக்கு ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தும்.

இந்த இடைத் தேர்தலைப் போல் பொது தேர்தலும் திடீரென வர வாய்ப்புள்ளது. எப்போது வாய்ப்புள்ளது என்று நான் ஜோதிடம் சொல்ல முடியாது. திடீர் பொது தேர்தல் வருவது நாட்டு மக்களுக்கு நல்லது இல்லைதான். ஆனாலும் ஆட்சிக்கு முடிவு கட்ட விரைவில் பொது தேர்தல் வந்தால் வரவேற்போம்.

திருமங்கலம் தொகுதி தேமுதிக வேட்பாளரை விரைவில் அறிவிப்பேன் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+