For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

புஷ் மீது ஷூ வீச்சு: இந்தியர்கள் மீதும் வீசப்பட்டதற்கு சமம் - எச்சூரி

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி: இந்திய மக்கள் உங்களை விரும்புகிறார்கள் என்று ஜார்ஜ் புஷ்ஷிடம், பிரதமர் மன்மோகன் சிங் கூறியதால், பாக்தாத்தில் புஷ் மீது வீசப்பட்ட ஷூக்கள், இந்திய மக்கள் மீதும் வீசப்பட்டதற்குச் சமம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொலிட்பீரோ உறுப்பினர் சீதாராம் எச்சூரி கூறியுள்ளார்.

பாக்தாத் சென்ற அதிபர் புஷ் மீது முன்டாசர் அல் ஜய்தி என்ற டிவி நிருபர் ஷூக்களை வீசி உலகையே பெரும் பரபரப்பில் ஆழ்த்தி விட்டார். அமெரிக்காவோ ஆடிப் போய் விட்டது.

இதுகுறித்து எச்சூரியிடம் செய்தியாளர்கள் கருத்து கேட்டபோது, அதிபர் புஷ்ஷை நமது பிரதமர் மன்மோகன் சிங் சந்தித்தபோது, இந்திய மக்கள் அனைவரும் உங்களை விரும்புவதாக கூறினாராம். எனவே இந்த ஷூ வீச்சை நம் நாட்டு மக்கள் மீதும் வீசியதாகவே எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஈராக்கை ஆக்கிரமித்துள்ள அமெரிக்காவின் மீது ஈராக் மக்களும், அரபு மக்களும் எந்த அளவுக்கு ஆத்திரத்தில் உள்ளனர் என்பதையே இது எடுத்துக் காட்டுகிறது என்றார் எச்சூரி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X