இசட் பிரிவு பாதுகாப்பை நிராகரித்த சிதம்பரம்

Subscribe to Oneindia Tamil

Chidambaram
டெல்லி: தனக்கு வழங்கப்பட்ட இசட் பிரிவு பாதுகாப்பை வேண்டாம் என மறுத்துவிட்டார் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம்.

நிதியமைச்சரானதில் இருந்து அவருக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. இப்போது உள்துறை அமைச்சராகிவிட்டதால் அவரது பாதுகாப்பை இசட் பிரிவுக்கு மேம்படுத்த இன்டெலிஜென்ஸ் பீரோ பரிந்துரைத்தது.

ஆனால், அந்தப் பரிந்துரையை சிதம்பரம் நிராகரித்துவிட்டார்.

ஒய் பிரிவு பாதுகாப்பில் உள்ளவர்களின் வீட்டின் முன் ஒரு ஹெட் கான்ஸ்டபிள் தலைமையி்ல் 4 ஆயுதம் தாங்கிய போலீசார் 24 மணி நேரமும் பாதுகாப்பு அளித்து வருகின்றனர். அந்த விஐபி செல்லும் இடமெல்லாம் இவர்களும் செல்வர்.

இசட் பிரிவில் உள்ளவர்களுக்கு ஒரு பைலட் கார், கூடுதலாக ஒரு பாதுகாப்பு வாகனம், மேலும் 4 ஆயுதம் தாங்கிய போலீசார் உடன் செல்வர்.

தனக்கு இசட் பிரிவு பாதுகாப்பு தேவையில்லை என்று கூறிவிட்ட சிதம்பரம், மேலும் ஒய் பிரிவு பாதுகாப்பில் உள்ளவர்களுக்கு ஒதுக்கப்படும் ஆயுதம் தாங்கிய படையினரின் எண்ணிக்கையையும் குறைக்க உத்தரவிட்டுள்ளார். இதன்படி ஒய் பிரிவில் உள்ளவர்களுக்கு தலா ஒரு ஆயுதம் தாங்கிய போலீஸ்காரர் குறைக்கப்படுகிறார்.

சிதம்பரத்துக்கு முன் உள்துறை அமைச்சராக இருந்த சிவராஜ் பாட்டீலுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு தரப்பட்டது குறிப்பிடத்தக்கது. கிட்டத்தட்ட பிரதமருக்கு இணையாக பாதுகாப்போடு சுற்றி வந்தால் பாட்டீல்.

டெல்லியில் மட்டும் 400 விஐபிக்களுக்கு15,000 போலீசார் 24 மணி நேர பாதுகாப்பு அளித்து வருவது குறிப்பிடத்தக்கது. இத்தனைக்கும் டெல்லியில் மொத்த போலீசாரின் எண்ணிக்கையே 60,000 தான்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+