பொங்கல் கொண்டாட இலவச பொருட்கள்?!
சென்னை: பொங்கல் பண்டிகையின்போது சர்க்கரை பொங்கல் தயாரிக்க தேவைப்படும் சமையல் பொருட்களை ரேஷன் அட்டை வைத்துள்ள அனைவருக்கும் இலவசமாக வழங்கும்படி திமுக உயர்நிலை குழு அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இந்தக் கோரிக்கையை அரசு அமலாக்கும் எனத் தெரிகிறது.
திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு இன்று சென்னையில் கூடியது. அறிவாலயத்தில் முரசொலி மாறன் வளாகத்தில் நடந்த இந்த கூட்டத்துக்கு திமுக தலைவரும், தமிழக முதல்வருமான கருணாநிதி தலைமை தாங்கினார்.
இக்கூட்டத்தில் 8 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் ஒன்று இலவச பொங்கல் பொருட்கள் வழங்குவது.
தமிழகத்தில் அனைத்து தரப்பினராலும் தமிழ் புத்தாண்டு மற்றும், பொங்கல் திருநாள் விழாக்கள் சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி குடும்ப அட்டை வைத்துள்ள அனைவருக்கும் சர்க்கரை பொங்கல் தயாரிக்க தேவைப்படும் பொருட்களை அரசின் சார்பில் இலவசமாக வழங்க வேண்டும் என்று முதலமைச்சருக்கும், தமிழக அரசுக்கும் திமுக உயர்நிலை செயல் திட்டக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.
மற்ற ஏழு தீர்மானங்களும் ஹர்கிஷன்சிங் சுர்ஜித், விபி சிங் மறைவு, மும்பை தீவிரவாதத்தில் இறந்தவர்களுக்கு இரங்கல் மற்றும் காங்கிரஸ் வெற்றிக்குப் பாராட்டுத் தெரிவிப்பவையாகும்.












Click it and Unblock the Notifications