மாணவியிடம் சில்மிஷம்-ராணுவ வீரர் கைது
ஆலங்குளம்: நெல்லை மாவட்டம் ஆலங்குளத்தில் பள்ளி மாணவியிடம் செக்ஸ் சில்மிஷத்தில் ஈடுபட்ட ராணுவ வீரர் கைது செய்யப்பட்டார்.
நெல்லை மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள நெல்லையப்பபுரத்தை சேர்ந்தவர் கலா. ஆலங்குளத்தில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார். மாணவி தினமும் டியூசன் படித்து விட்டு இரவு 7 மணிக்கு பஸ் மூலம் ஊருக்கு செல்வார். பின்னர் பஸ் நிறுத்தத்தில் இருந்து தந்தையுடன் வீட்டுக்கு செல்வது வழக்கம்.
ஆலங்குளம் அருகேயுள்ள மருதப்பபுரம் அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பூல்பாண்டியன் மகன் சந்திரன். ராணுவ வீரரான இவர் 2 மாத லீவில் ஊருக்கு வந்துள்ளார். இவர் தினமும் மாணவி கலா செல்லும் பஸ்சில் பின் தொடர்ந்து சென்று அவரை கேலி செய்து வந்தார்.
நேற்று பஸ்சில் சென்ற மாணவியின் சுடிதாரை பிடித்து இழுந்துள்ளார். இதுகுறித்து மாணவி தனது தந்தையிடம் கூறியுள்ளார். அவர் ஆலங்குளம் மகளிர் போலீசில் புகார் செய்தார்.
பத்ரகாளி விசாரணை:
சப்-இன்ஸ்பெக்டர் பத்ரகாளி விசாரணை நடத்தி ராணுவ வீரர் சந்திரனை கைது செய்து தென்காசி கோர்ட்டில் ஆஜர்படுத்தினார். பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.












Click it and Unblock the Notifications