19ம் தேதி முதல் லாரிகள் ஓடாது
சென்னை: அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் மற்றும் தமிழக லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் நடத்தும் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு சதர்ன் லாரி உரிமையாளர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இதனால் வரும் 19ம் தேதி இரவு முதல் தமிழகத்தில் லாரிகள் ஓடாது.
தேசிய நெடுஞ்சாலைகளில் வசூலிர்ரப்படும் சுங்க வரியை குறைக்க வேண்டும், இந்தியா முழுவதும் ஒரே அளவில் வரியை வசூலிக்க வேண்டும், டீசல் விலையை லிட்டருக்கு 10 ரூபாய் குறைக்க வேண்டும், டயர் விலையைக் குறைக்க வேண்டும், கனரக வாகனங்களுக்கு ஆயுள் காப்பீட்டுத் தொகையை குறைக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன் வைத்து இந்தப் போராட்டம் நடக்கிறது.
இந்தப் போராட்டத்தால் 19ம் தேதி இரவு 12 மணி முதல் மணல், கருங்கல், ஜல்லி, செங்கல் லாரிகள் ஓடாது என சதர்ன் லாரி உரிமையாளர் நலச்சங்கத் தலைவர் ஆர்.முனிரத்தினம் அறிவித்துள்ளார்.