தமிழகத்தில் 7 ஐ.ஜிக்கள் மாற்றம்
சென்னை: தமிழகத்தில் 7 ஐஜிக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சேலம் போலீஸ் கமிஷனராக சுனில் குமார் சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.
சேலம் போலீஸ் கமிஷனராக இருந்த செண்பகராமன், திருச்சி ஆயுதப்படை ஐஜியாக மாற்றப்பட்டுள்ளார்.
இதுவரை திருச்சி ஆயுதப்படை ஐஜியாக இருந்து வந்த சுனில்குமார் சிங், சேலம் போலீஸ் கமிஷனராக மாற்றப்பட்டுள்ளார்.
குற்ற விசேஷ புலனாய்வுப் பிரிவு ஐஜியாக இருந்த தமிழ்ச்செல்வன், கமாண்டோ படைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
கமாண்டோ படை ஐஜி அசுதோஷ் சுக்லா, குற்ற விசேஷ புலனாய்வுப் பிரிவு ஐஜியாக்கப்பட்டுள்ளார்.
சென்னை சிபிசிஐடி ஐஜி துக்கையாண்டி, மாநில லஞ்ச ஒழிப்பு விசேஷ பிரிவு ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
கடலோர பாதுகாப்பு குழும ஐஜி மகேந்திரன் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளார்.
சேலம் போக்குவரத்துக் கழக தலைமை கண்காணிப்பு அதிகாரி ராஜேஷ் தாஸ், கடலோர பாதுகாப்பு குழு ஐஜியாக்கப்பட்டுள்ளார்.
சென்னை சிபிசிஐடி டிஐஜி கருணா சாகர், ஆயுதப்படை போலீஸ் டிஐஜியாக சென்னையில் பணியமர்த்தப்பட்டுள்ளார்.
உள்துறைச் செயலாளர் மாலதி இதற்கான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார்.












Click it and Unblock the Notifications