ரியல் எஸ்டேட்: விதிகளை தளர்த்தக் கோரிக்கை
டெல்லி: வெளிநாட்டு நிதியைப் பெறுவதை சுலபமாக்க வேண்டும், உள்நாட்டில் வீட்டுக் கடன்களுக்கு மேலும் வட்டி குறைக்கப்பட வேண்டும் என ரியல் எஸ்டேட் அதிபர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆனால் இந்த கோரிக்கையை இப்போதைக்கு ஏற்பதற்கில்லை என திட்டக் குழு துணைத் தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியா தெரிவித்துள்ளார்.
மேலும், பணவியல் கொள்கைகளை அடிக்கடி மாற்றிக் கொண்டிருப்பது ஆரோக்கிமல்ல. ரியல் எஸ்டேட் துறையில் செயற்கை வளர்ச்சியைத்தான் அது ஏற்படுத்தும், என நிதித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தேசிய ரியல் எஸ்டேட் மற்றும் வளர்ச்சிக் குழுமத்தின் பிரதிநிதிகள் இன்று திட்டக் கமிஷன் அதிகாரிகளைச் சந்தித்து இதுகுறித்து கோரிக்கைகளை வைத்தனர். ஆனால் அவர்களது கோரிக்கைகள் இப்போது ஏற்கப்பட முடியாத சூழல் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
மேலும் அதிகபட்ச வீட்டுக் கடன் வரம்பை 30 லட்சம் ரூபாயாக உயர்த்துவது குறித்த கோரிக்கை பரிசீலிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார் அலுவாலியா.












Click it and Unblock the Notifications