முக்கிய ராணுவ ஆவணங்களுடன் பாக். உளவாளி கைது
லக்னோ: பாகிஸ்தானைச் சேர்ந்த ஐ.எஸ்.ஐ. ஏஜென்ட் ஒருவர், ராணுவம் தொடர்பான முக்கிய ஆவணங்களுடன் லக்னோவில் பிடிபட்டார்.
லக்னோவில் உள்ள சர்பாக் ரயில் நிலையத்தில் வைத்து அவர் கைது செய்யப்பட்டார்.
அவரது பெயர் அப்துல் ஜாபர் என்கிற சிக்கந்தர். பாகிஸ்தானின் கராச்சி நகரைச் சேர்ந்தவர். உ.பி. மாநில தீவிரவாதத் தடுப்புப் பிரிவு போலீஸார் அவரைக் கைது செய்துள்ளனர். அவரிடமிருந்து ராணுவம் தொடர்பான பல முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
லக்னோ கன்டோன்மென்ட் பகுதியின் வரைபடங்கள், மத்திய ராணுவ கமாண்ட் குறித்த பல முக்கியத் தகவல்கள் உள்ளிட்டவை அவரிடம் இருந்தன.
பாகிஸ்தான் ராணுவ உளவுப் பிரிவால் பயிற்சி அளிக்கப்பட்டவர் சிக்கந்தர். இந்திய விமானப்படை, ராணுவம், கடற்படையின் முக்கிய பகுதிகளில் உளவு பார்க்க சிறப்பு பயிற்சியும் பெற்றுள்ளார்.
தான் சேகரிக்கும் தகவல்களை இன்டர்நெட் மூலமும், தொலைபேசி மூலமும் பாகிஸ்தானில் உள்ள ஐஎஸ்ஐ உயர் அதிகாரிகளுக்கு அவர் வழங்கி வந்துள்ளார்.
2007ம் ஆண்டுக்கு முன்பு வரை சிக்கந்தர் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டிருந்தார். அதன் பின்னர் அவரைத் தொடர்பு கொண்ட ஐ.எஸ்.ஐ., இந்தியாவில் உளவு பார்க்கும் பணிக்கு அவரை நியமித்தது.
பாகிஸ்தானில் 9 மாத பயிற்சி எடுத்துக் கொண்ட பின்னர் அவர் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டுள்ளார். சிக்கந்தரின் குடும்பத்திற்கான அனைத்து செலவுகளையும் ஐ.எஸ்.ஐ.யின் ராணுவ புலனாய்வுப் பிரிவே பார்த்துக் கொள்கிறதாம்.
கடந்த நவம்பர் 15ம் தேதி காத்மாண்டு வழியாக இந்தியாவுக்கு வந்துள்ளார் சிக்கந்தர்.
பல்வேறு ஆசிய நாடுகளில் உளவு பார்த்துள்ள சிக்கந்தர், இந்தியாவுக்கு இதற்கு முன்பு 3 அல்லது நான்கு முறை வந்துள்ளாராம்.
அவரை போலீஸ் ரிமான்ட்டில் எடுத்து தீவிரமாக விசாரிக்க தீவிரவாதத் தடுப்புப் பிரிவு போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.
-
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
ஹேப்பி நியூஸ்..சிலிண்டர் சிக்கல் இனி வராது! இந்தியாவுக்கு கைகொடுத்த ஈரான்! பாய்ந்து வரும் கப்பல்கள்! -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக












Click it and Unblock the Notifications