வன்னி போர் முனையில் இந்தியா உள்ளிட்ட 7 நாட்டு ராணுவ ஆலோசகர்கள் ஆய்வு

Subscribe to Oneindia Tamil

கொழும்பு: வன்னி போர்முனைக்கு இந்தியா உள்ளிட்ட 7 நாட்டு ராணுவ ஆலோசகர்களை இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் அழைத்துச் சென்று போர் நிலவரங்கள் குறித்து விளக்கியுள்ளது.

கடந்த திங்கள்கிழமை இவர்கள் அனைவரும் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

இந்தியா தவிர அமெரிக்கா, பாகிஸ்தான், ஜப்பான், இங்கிலாந்து, வங்கதேசம், மாலத்தீவு ஆகிய நாடுகளின் ராணுவ ஆலோசகர்களும் இதில் இடம் பெற்றிருந்தனர்.

முதலில் அனைவரும் வன்னியில் உள்ள பாதுகாப்புப் படைகளின் தலைமையகத்திற்குச் சென்றனர். பின்னர் ராணுவத்தின் 57வது பிரிவு, 59வது பிரிவு தலைமை அலுவலகங்களுக்கும் அழைத்துச் செல்லப்பட்டனர்.

அங்கு வெளிநாட்டு பாதுகாப்பு ஆலோசகர்களுக்கு போர் நிலைமை குறித்து அந்தந்த கமாண்டர்கள் விளக்கம் அளித்தனர்.

மேலும், விடுதலைப் புலிகளுடான போர் ஏன் அவசியம் என்பதையும் அவர்கள் விளக்கினர்.

இந்த விஜயத்தின்போது, உள்ளூரிலேயே இடம் பெயர்ந்த தமிழ் அகதிகள், சரணடைந்த விடுதலைப் புலிகள் ஆகியோரை 7 நாட்டு ராணுவ ஆலோசகர்கள் சந்திக்க வாய்ப்பளிக்கப்பட்டது.

மேலும் இலங்கை அரசு மேற்கொண்டு வரும் நிவாரணப் பணிகளும் விளக்கிக் கூறப்பட்டது.

இதுதவிர சில வெளிநாடுள் அனுப்பிய மனிதாபிமான உதவிகளை இங்குள்ள சில என்ஜிஓ அமைப்புகள் தவறாகப் பயன்படுத்துவதையும், 7 நாட்டு பாதுகாப்பு ஆலோசகர்களிடம் இலங்கை அதிகாரிகள் விளக்கிக் கூறினார்களாம்.

இலங்கை பாதுகாப்புத்துறை இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+