இரும்பு ஏலத்தில் பஙகேற்க டாடாவுக்கு தடை நீங்கியது!

முன்னதாக, கடும் சிபாரிசு மூலம் இந்த ஏலத்தில் டாடா பங்கேற்க முனைந்ததாக குற்றம்சாட்டி இந்த ஏலத்தில் பங்கேற்கக் கூடாது என அந்த அரசு தடை விதித்திருந்தது.
இதுகுறித்து விசாரித்து அந்நாட்டின் நீதித்துறை, இந்த ஏலத்துக்காக டாடா எந்தவித முறைகேட்டிலும் இறங்கவில்லை என உறுதி செய்ததைத் தொடர்ந்து, லைபீரியா அரசு டாடாவுக்கு கிரீன் சிக்னல் காட்டியுள்ளது.
தங்கள் மீது எந்த முகாந்திரமும் இல்லாமல், வெளிப்படையாக குற்றம் சுமத்தி இமேஜைக் கெடுத்திவிட்டது லைபீரிய அரசு என டாடா ஸ்டீல் முன்னதாக குற்றம் சாட்டியிருந்தது.
டாடா ஸ்டீல் நிறுவனம் அளித்திருந்த ஒப்பந்தப் புள்ளி விவரம் தொழில் நுட்ப ரீதியாகவும் சரி, மதிப்பீட்டிலும் சரி, மற்ற நிறுவனங்களை விட உயர்வானது. ஆனால் இதையெல்லாம் ஆராயாமல் பொத்தாம் பொதுவாகக் குற்றம் சாட்டியவிட்டதாக லைபீரியா அரசுக்கு அப்பீல் செய்திருந்தது டாடா.
இதை தீவிரமாகப் பரிசீலித்த பிறகு, டாடா ஸ்டீல் நிறுவனம் மீது எந்தத் தவறுமில்லை என வெளிப்படையாக அறிவித்து, ஏலத்துக்கு அழைத்துள்ளது லைபீரியா.
ஏற்கெனவே, கனடா, மொசாம்பிக் மற்றும் ஆஸ்திரேலியாவிடமிருந்தும் இரும்புத் தாது ஏலத்தில் எடுத்துள்ளது டாடா.












Click it and Unblock the Notifications