இஸ்ரோ உருவாக்கிய செயற்கைக்கோள் டபிள்யூ2எம் விண்ணில் செலுத்தப்பட்டது
Subscribe to Oneindia Tamil
சென்னை: வர்த்தக ரீதியாக, இந்திய விண்வெளி ஆய்வுக் கழகம் வடிவமைத்து உருவாக்கிய டபிள்யூ2எம் என்ற தகவல் தொடர்பு செயற்கைக்கோள், ஐரோப்பாவின் ஏரியான்-5 ராக்கெட் மூலம் இன்று விண்ணில் செலுத்தப்பட்டது.
ஐரோப்பாவின் ஈஏடிஎஸ்-ஆஸ்ட்ரியம் நிறுவனத்துடன் இணைந்து இந்த செயற்கைக்கோளை இஸ்ரோ உருவாக்கியுள்ளது.
3463 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைக் கோள், இஸ்ரோ இதுவரை உருவாக்கிய செயற்கைக் கோள்களிலேயே அதிக எடை கொண்டதாகும்.
பிரெஞ்சு கயானாவில் உள்ள கொரு விண்வெளி ஏவு மையத்திலிருந்து இன்று காலை இந்த செயற்கைக் கோள் விண்ணில் செலுத்தப்பட்டது.












Click it and Unblock the Notifications