திருமங்கலம்-இன்றுடன் மனு தாக்கல் முடிகிறது
திருமங்கலம்: திருமங்கலம் தொகுதி இடைத் தேர்தலுத்தான வேட்பு மனு தாக்கல் இன்றுடன் முடிவடைகிறது.
தேர்தலையொட்டி திமுக, அதிமுக, தேமுதிக உள்ளிட்ட கட்சியினர் போட்டி போட்டுக் கொண்டு தொகுதி முழுவதும் சுவர் விளம்பரங்கள், பேனர்கள், போர்டுகள், தட்டிகள் மூலம் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
இந்தத் தொகுதியில் பிரச்சாரத்தின்போது பட்டாசுகள் வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதை மீறி அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழக கூட்டத்தினர் பட்டாசுகள் வெடித்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவாகியுள்ளது.
மேலும் பொது சுவற்றில் அனுமதியில்லாமல் விளம்பரம் செய்தது, ரோட்டின் குறுக்கே பேனர் கட்டியது என அனைத்து அரசியல் கட்சிகள் மீதும் மொத்தம் 18 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதில் திமுகவினர் மீது 7 வழக்குகளும், தேமுதிகவினர் மீது 3 வழக்குகளும், அதிமுகவினர் மீது 2 வழக்குகளும், லட்சிய திராவிட முன்னேற்ற கழகம், சமூக நீதிக்கட்சி மீது தலா ஒரு வழக்கும், மூமுகவினர் மீது 3 வழக்குகளும் அடக்கம்.
இத் தொகுதியில் வரும் ஜனவரி 9ம் தேதி வாக்குப் பதிவு நடக்கிறது.












Click it and Unblock the Notifications