அஇசமக துணைத் தலைவரானார் ராதிகா

பாளையங்கோட்டை ஜவகர் மைதானத்தில் நடந்த இந்தப் பொதுக் கூட்டத்தில் சரத்குமார் பேசுகையில்,
தமிழகத்தில் உள்ள 2 திராவிட கட்சிகளுமே மக்கள் பிரச்சினைக்காகவோ, மக்கள் நல திட்டங்களுக்காகவோ செயல்படவில்லை. அவர்களது பதவியை தக்க வைப்பதற்காகத்தான் ஆட்சி நடத்துகிறார்கள். மக்களை ஏமாற்றுகின்ற வேலையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
காமராஜர் ஆட்சிக்காலம்தான் பொற்காலம். அப்போதுதான் மக்களுக்கு தொலை நோக்கு திட்டங்களும், நல்ல திட்டங்களும் கொண்டுவரப்பட்டன. திராவிட கட்சிகள் தொலை நோக்கு திட்டம் கொண்டு வந்திருந்தால் இந்த மின்சார தட்டுப்பாடு ஏற்பட்டிருக்காது.
மின் தட்டுப்பாட்டுக்கு அதிக காரணம் அதிமுக தான். 1994-95ம் ஆண்டு அவர்கள் ஆட்சியில் இருந்தபோது காற்றாலை மின்சாரத்தை 4,000 மெகாவாட் உற்பத்தி செய்வதற்கு தனியார் நிறுவனங்கள் முன்வந்தன. ஆனால் அவர்கள் அதை பொருட்படுத்தாமல் விட்டுவிட்டார்கள். இதனால்தான் இந்த மின் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
தொலை நோக்குத் திட்டத்தின் மூலம் 2011ல் சமத்துவ மக்கள் கட்சி ஆட்சியை பிடிக்கும்போது வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து இருக்கின்ற 60 லட்சம் இளைஞர்களுக்கும் வேலைவாய்ப்பை தருவோம் என்ற உத்தரவாதத்தை தருகிறேன்.
சென்னைக்கு வேலைக்கு செல்பவர்கள் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. நான் கூறுவது நெல்லையை சென்னையாக மாற்றுங்கள்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் நான் ஆட்சிக்கு வந்தால் 5 மாதத்தில் மின்வெட்டு இல்லாமல் ஆக்கிவிடுவேன் என்கிறார். எப்படி என்று கேட்டால், அதை நான் சொன்னால் மற்றவர்கள் அதை காப்பி அடித்து விடுவார்கள், நான் ஆட்சிக்கு வந்தபின் அதை செயல்படுத்துவேன் என்கிகிறார்.
இது வேடிக்கையாக உள்ளது. அவரிடம் திட்டம் இருந்தால் அதை இப்போதே சொல்ல வேண்டும்.
இந்த விழாவில் உங்களின் விருப்பத்திற்கு இணங்க, உங்களின் அரசி, சித்தி, எனது மனைவி ராதிகாவுக்கு கட்சியின் துணைத் தலைவர் பதவி வழங்கப்படுகிறது என்றார் சரத்குமார்.












Click it and Unblock the Notifications