பிரதமர் மன்மோகனுடன் இந்திய தூதர்கள் சந்திப்பு
Subscribe to Oneindia Tamil
டெல்லி: பல்வேறு நாடுகளில் பணியாற்றி வரும் இந்தியத் தூதர்களை பிரதமர் இன்று டெல்லியில் சந்தித்து பேசினார். சர்வதேச அளவில் பாகிஸ்தான் மீது நெருக்குதலை ஏற்படுத்துவது குறித்து தூதர்களுடன் அவர் ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது.
மும்பைத் தாக்குதல் தொடர்பாக சர்வதேச நாடுகளிடம் இந்தியாவின் நிலை குறித்து விளக்கும் வகையில், இந்தியத் தூதர்களின் 3 நாள் மாநாட்டுக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது.
இந்த மாநாட்டை வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி தொடங்கி வைத்தார். இன்று பிரதமர் மன்மோகன் சிங், 120க்கும் மேற்பட்ட நாடுகளுக்கான இந்தியத் தூதர்கள் சந்தித்தனர்.
அப்போது மும்பைத் தாக்குதல் சம்பவம், அதைத் தொடர்ந்து எழுந்துள்ள நிலை, பாகிஸ்தான் மீதான சர்வதேச நாடுகளின் நெருக்குதலை அதிகரிப்பது உள்ளிட்டவை குறித்து பிரதமர் விவாதித்ததாக தெரிகிறது.












Click it and Unblock the Notifications