ஊனமுற்ற பெண்ணை கற்பழித்தவர் கைது
Subscribe to Oneindia Tamil
நெல்லை: நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே ஊனமுற்ற பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து விட்டு கல்யாணம் செய்ய மறுத்த நபரைப் போலீஸார் கைது செய்தனர்.
வள்ளியூர் அருகே உள்ள மதகநேரி செம்பிகுளத்தை சேர்ந்த நாராயணன் மகள் வனிதா. உடல் ஊனமுற்ற இவரை அதே ஊரை சேர்ந்த பால் நாடார் மகன் செந்தில் என்பவர் திருமணம் செய்வதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்தார்.
இதில் வனிதா கர்ப்பமானார். அதன்பிறகு அவரை திருமணம் செய்ய செந்தில் மறுத்துவிட்டார். இதுகுறித்து வனிதா வள்ளியூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரித்து செந்திலை கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications