சத்யம் நிறுவனத்துக்கு 8 ஆண்டுகள் தடை: உலக வங்கி அறிவிப்பு!!

சமீப காலமாக சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனம் அடுத்தடுத்து வீழ்ச்சிகளைச் சந்தித்து வருகிறது. கடந்த வாரம் மேடாஸ் கட்டுமான நிறுவன இணைப்பில் அதன் தலைவர் காட்டிய அவசரம், முதலீட்டாளர்களை கடும் அதிருப்திக்குள்ளாக்கியது. இதனால் இந்நிறுவனப் பங்குகள் சர்வதேச அளவில் கடுமையான வீழ்ச்சி கண்டன. செபி அமைப்பின் க டும் கண்டனத்துக்கும் ஆளானது சத்யம்.
இந்தியாவிலும் 35 சதவிகிதம் வரை இந்நிறுவன பங்குகள் விலை சரிந்தது.
இந்நிலையில் மிகப்பெரிய சைபர் மோசடியில் இந்நிறுவனம் சிக்கி, உலக வங்கியிடம் பெயரைக் கெடுத்துக் கொண்டுள்ளது.
உலக வங்கியின் கணிப்பொறி செயல்பாடுகள் முழுவதையும் சென்னையில் இருந்து சத்யம் நிறுவனம் நிர்வகித்து வருகிறது. சத்யம் நிறுவனத்தை சேர்ந்த சிலர் ஒரு மென்பொருளை வாஷிங்டனில் உள்ள உலக வங்கியின் ஒரு கணிப்பொறியில் நிறுவி, உலக வங்கியின் தகவல்களைக் கடத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.
உலக வங்கி தொடர்பாக கணிப்பொறியில் அவர்கள் என்னவெல்லாம் தட்டச்சு செய்கிறார்களோ அவை அனைத்தையும் ஒரு வேறு ஒருவருக்கு இந்த மென்பொருள் கடத்தியுள்ளது. மேலும் உலக வங்கி தொடர்பான ஆவணங்கள் முறையாகப் பராமரிக்கப்படவில்லையாம். சத்யம் நிறுவனத்தைச் சேர்ந்த தனிப்பட்ட சிலர் இதன் மூலம் ஆதாயமடைந்துள்ளதாக உலக வங்கி புகார் கூறியுள்ளது.
கடந்த ஜனவரி மாதம்தான் இந்த உண்மை எஃப்பிஐ மூலமாக உலக வங்கிக்கு தெரிய வந்துள்ளது.
உடனே சத்யம் நிறுவனத்தை உலக வங்கி அடுத்த 8 ஆண்டுகளுக்கு தடைசெய்துள்ளது. ஆனால் இந்த தகவலை வெளியில் வராமல் பார்த்துக் கொண்டது சத்யம் நிறுவனம். இப்போது விஷயம் வெளியில் கசிந்துவிட்டது.
இது சத்யம் நிறுவனத்திற்கு மட்டுமல்ல, இந்தியாவில் இருந்தபடி பன்னாட்டு அமைப்புகளுக்கு அவுட்சோர்ஸிங் செய்யும் பல பிபிஓக்களுக்கும் பலத்த அடியாகும். சத்யம் நிறுவனத்தின் இந்த செயல் இந்திய நிறுவனங்கள் மீதான நம்பகத்தன்மையை அடியோடு ஒழித்துவிட்டதாக பலரும் இப்போது கருத்துக் கூறி வருகின்றனர்.
ஆனால் இதுகுறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது சத்யம் நிறுவனம்.
இந்நிலையில் இந்த தகவல் வெளியில் கசிந்தபிறகு சத்யம் நிறுவனப் பங்குகள் பெரும் சரிவைச் சந்துள்ளன. மேலும் 16 சதவிகிதம் விலை குறைந்து நேற்று ரூ. 140க்கு விற்கப்பட்டன. நியூயார்க் சந்தையிலோ வெறும் 6 டாலருக்குக் கீழ் போய்விட்டது.
சத்யம் தலைவர் ராஜினாமா?:
இதற்கிடையே சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனர் மற்றும் அதன் தலைவர் ராமலிங்க ராஜூ பதவி விலகிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தலைவர் பதவியிலிருந்து விலகும் கடிதத்தை அவர் இயக்குனர் குழுவுக்கு அனுப்பி வைத்திருப்பதாகவும், இயக்குனர் குழுவின் முடிவுக்காகக் காத்திருப்பதாகவும் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலையில் சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்தின் இயக்குனர் குழுக் கூட்டம் வரும் 29ம் தேதி நடைபெறவுள்ளது.
இதையொட்டி இப்போதே ராஜினாமா கடிதத்தை இயக்குனர் குழுவுக்கு அவர் அனுப்பிவிட்டார் என்கிறார்கள்.
-
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு












Click it and Unblock the Notifications