For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விஜயன் கொலை வழக்கு - பானுவுக்கு ஜாமீன்

By Staff
Google Oneindia Tamil News

Bhanumathy
சென்னை: எம்.ஜி.ஆரின் வளர்ப்பு மகள் சுதாவின் கணவர் விஜயன் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சுதாவின் தங்கை பானுமதிக்கும், இந்த வழக்கில் கைதான இன்னொருவரான கார்த்திக்குக்கும் சென்னை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

சென்னை கோட்டூர்புரம் பகுதியி்ல் கூலிப்படையினரால் கொல்லப்பட்டார் விஜயன். சொத்துப் பிரச்சினை தொடர்பாக சுதாவின் தங்கை பானு என்கிற பானுமதிதான் கூலிப்படையினரை ஏவிக் கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து பெங்களூரில் வசித்து வந்த பானு, அவருக்கு கூலிப்படை ஐடியாவைக் கொடுத்து ஆட்களையும் ஏற்பாடு செய்த கான்ஸ்டபிள் கருணா என்கிற கருணாகரன், கார்த்திக் உள்ளிட்டோரை போலீஸார் கைது செய்தனர்.

இவர்கள் அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களது ஜாமீன் கோரிக்கை செஷன்ஸ் நீதிமன்றத்தில் நிராகரிக்கப்பட்டு விட்டது.

இந்த நிலையில் ஜாமீன் கோரி பானு, கருணா, கார்த்திக் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு செய்தனர்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி சுதந்திரம், பானு, கார்த்திக் ஆகியோருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். அதேசமயம், கருணாவின் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்தார்.

பானு, கார்த்திக் இருவரும் தலா ரூ. 10,000 ரொக்க உத்தரவாதம் மற்றும் அதே தொகைக்கு இரு நபர் உத்தரவாதம் வழங்க வேண்டும். பானு பெங்களூரில் தங்கியிருக்க வேண்டும். கார்த்திக் நெல்லையி்ல தங்கியிருக்க வேண்டும் என நீதிபதி தனது உத்தரவில் நிபந்தனை விதித்துள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X