சத்யம் இயக்குநர்கள் ராஜினாமா படலம் ஆரம்பம்!
டெல்லி: சத்யம் நிறுவனத்தின் இயக்குனர்களுள் ஒருவரான மங்களம் சீனிவாசன் இன்று ராஜினாமா செய்தார்.
மேடாஸ் நிறுவனத்தை வாங்கும் திட்டத்தை ஆதரித்து வாக்களித்தவர்களில் ஒருவர் என்ற முறையில் தார்மீகப் பொறுப்பேற்று இந்த முடிவை எடுத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
1991ம் ஆண்டு முதலா சத்யம் இயக்குநர்களில் ஒருவராக இருப்பவர் சீனிவாசன்.
மேடாஸ் நிறுவனத்தில் அதிக பங்குகளை வைத்துள்ள சத்யம் நிறுவனத் தலைவர் ராமலிங்க ராஜூ, சில தினங்களுக்கு முன் அந்த நிறுவனத்தை சத்யம் நிறுவனத்துடன் இணைக்க முடிவு செய்தார். அதற்கு மங்களம் சீனிவாசன் ஆதரவளித்திருந்தார். மேடாஸ் முழுக்க முழுக்க ராஜூவின் மகன் கட்டுப்பாட்டில் இயங்கும் நிறுவனம் ன்பது குறிப்பிடத்தக்கது.
தனது சுயநலத்துக்காக ராஜூ இந்த முடிவை எடுத்திருப்பதாக முதலீட்டாளர்கள் போர்க் கொடி உயர்த்த, உடனடியாகப் பணிந்த சத்யம் 24 மணி நேரத்துக்குள் தனது முடிவைப் பின்வாங்கியது. இதனால் சத்யம் பங்குகள் விலை ஒரே நாளில் 35 சதவிகிதம் குறைந்தன. சத்யம் நிறுவன சந்தை மதிப்பும் ரூ.6100 கோடி அளவுக்கு குறைந்துவிட்டது.
மங்களம் சீனிவாசனின் ராஜினாமா இப்போது பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications