இந்திய போர் விமானங்கள் குண்டு வீசி ஒத்திகை

பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்களை எந்த நேரத்திலும் இந்திய விமானப்படை போர் விமானங்கள் தாக்கி அழிக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் பொக்ரான் பகுதியில், இந்திய விமானப்பட விமானங்கள் போர் ஒத்திகையில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா அணுகுண்டு சோதனை நடத்திய பொக்ரானில் போலி குண்டுகளை வீசி போர் விமானங்கள் ஒத்திகையில் ஈடுபட்டன. குறி தவறாமல் இலக்குகளை தாக்குவது குறித்த பயிற்சியாக இது நடத்தப்பட்டது.
பொக்ரான் தவிர, குவாலியர், ஜாம்நகர், ஜோத்பூர் உள்ளிட்ட இடங்களில் உள்ள பாலைவனப் பகுதிகளில் இந்த ஒத்திகை நடந்தது. இது வழக்கமான பயிற்சிதான் என்று கூறப்பட்டாலும் கூட தற்போதைய சூழ்நிலையி்ல இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
அதேசமயம், பாகிஸ்தானைப் போல நமது விமானப்படை போர் வி்மானங்களை எல்லைக்கு அருகில் நிறுத்த வேண்டிய அவசியம் இல்லை. எதிரிகளின் தாக்குதல் குறித்து தகவல் தெரிந்தவுடனேயே சென்று அழிக்கக் கூடிய வகையில் நமது விமானப்படை திறன் வாய்ந்தது என்று விமானப்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications