தாங்க முடியாத இழப்பில் மியூச்சுவல் பண்ட் முதலீட்டாளர்கள்!
சென்னை: மியூச்சுவல் பண்ட் எனப்படும் பரஸ்பர நிதியில் முதலீடு செயதவர்களுக்கு இந்த 2008ம் ஆண்டில் மட்டும் ரூ.1,50,000 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
இந்தப் பிரிவில் முதலீடு செய்யும்போது லாப நஷ்டம் சகஜம்தான் என்றாலும், இந்த ஆண்டுதான் முன் எப்போதும் இல்லாத அளவாக ரூ.1,50,000 கோடியை இழந்துள்ளனர்.
இந்த ஆண்டு பரஸ்பர நிதியில் செய்யப்பட்ட மொத்த முதலீட்டில் மூன்றில் ஒரு பங்கு இந்தத் தொகை.
இந்தியாவில் இப்போது 36 நிறுவனங்கள் மியூச்சுவல் பண்ட் தொழிலில் ஈடுபட்டுள்ளன.
2007ம் ஆண்டில் மட்டும் பரஸ்பர நிதியில் முதலீடு செய்யப்பட்ட தொகை ரூ.2,30,000 கோடி. இத்துடன் சேர்த்தால் 2007ம் ஆண்டில் மட்டும் பரஸ்பர நிதியில் இருந்த மொத்த முதலீட்டுத் தொகை ரூ.5,50,000 கோடி.
ஆனால் இந்த ஆண்டு ரிவர்ஸில் போய்விட்டது நிலைமை. இந்த மியூச்சுவல் பண்ட்களுக்கு ஏற்பட்ட சரிவால் முதலீட்டில் ரூ.1,50,000 கோடி கரைந்து போய் ரூ. 4,00,000 கோடியாகிவிட்டது.
ஆனாலும் வரவிருக்கும் 2009ல் நிலைமை சரியாகும் என நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்கள் பரஸ்பர நிதி நிறுவனங்களும், முதலீட்டாளர்கலும்.
இதற்குப் பெயர்தான் 'பரஸ்பர நம்பிக்கையோ'!












Click it and Unblock the Notifications