பெனாசிர் படுகொலை: ஐ.நா. விசாரணைக்கு பான் கி மூன் உறுதி
Subscribe to Oneindia Tamil

இதுதொடர்பாக பான் கி மூன் வெளியிட்டுள்ள அறிக்கையில், முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் பெனாசிர் பூட்டோ கொலை குறித்து விசாரிக்க விசாரணைக் கமிஷன் அமைக்கப்படும் என்று கூறியுள்ளார்.
ஐ.நா. துணை செய்தித் தொடர்பாளர் மேரி ஓகாபே கூறுகையில், பெனாசிர் பூட்டோ கொலை வழக்கில் நீதி மற்றும் உண்மையை நிலைநாட்டுவது குறித்து தான் உறுதியுடன் இருப்பதாக பாகிஸ்தான் நாட்டுக்கும், பாகிஸ்தான் மக்களுக்கும் பான் கி மூன் உறுதியளித்துள்ளார் என்றார்.
கடந்த ஆண்டு டிசம்பர் 27ம் தேதி, அதாவது இதே நாளில், ராவல்பிண்டியில் நடந்த தேர்தல் பிரசார பேரணியில், பெனாசிர் பூட்டோ மனித வெடிகுண்டுத் தாக்குதல் மூலம் கொல்லப்பட்டார் என்பது நினைவிருக்கலாம். இன்றுடன் பெனாசிர் கொல்லப்பட்டு ஒரு ஆண்டு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications