மும்பை சிறையில் கஸாப்பை அடையாளம் காட்டிய 35 சாட்சிகள்

மும்பை தாக்குதலில் ஈடுபட்டு சிக்கியுள்ள ஒரே தீவிரவாதி அஜ்மல் கஸாப் மட்டுமே. இதனால் பலத்த பாதுகாப்புடன் போலீஸார் அவனை வைத்துள்ளனர்.
இந்த நிலையில் சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தில் கஸாப் வெறித்தனமான தாக்குதலில் ஈடுபட்டிருந்தபோது அவனை நேரில் பார்த்த 40 சாட்சிகளை போலீஸார் திரட்டினர்.
அவர்களில் 35 பேர் நேற்று ஆர்தர் சாலையில் உள்ள மத்திய சிறையில் நடந்த அணிவகுப்பின்போது, கஸாப்பை அடையாளம் காட்டினர்.
இதற்காக போலீஸாரின் ரகசிய இடத்திலிருந்து பலத்த பாதுகாப்புடன் கஸாப், ஆர்தர் சாலை சிறைக்குக் கொண்டு வரப்பட்டான். பின்னர் அங்கு தேர்ந்தெடுக்கப்பட்ட சிறை அதிகாரிகள், போலீஸார் முன்னிலையில் அடையாள அணிவகுப்பு நடத்தப்பட்டது.
போலீஸார் அழைத்து வந்த 35 சாட்சிகளும் கஸாப்பை அடையாளம் காட்டினர்.
அடையாள அணிவகுப்பு முடிந்ததும், கஸாப் மீண்டும் போலீஸாரின் ரகசிய இடத்திற்குக் கொண்டு செல்லப்பட்டான்.
அடையாள அணிவகுப்பில் இடம் பெற்றவர்களில் முக்கியமானவர்கள் போலீஸ்காரர் அருண் ஜாதவ் மற்றும் தீவிரவாதிகள் தப்ப பயன்படுத்திய ஸ்கோடா காரின் உரிமையாளர் அரஸா ஆகியோர் ஆவர்.












Click it and Unblock the Notifications