கொழும்பில் தற்கொலைப் படைத் தாக்குதல்: 5 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

கொழும்பு: கொழும்பில், ஒரு சர்ச்சுக்கு வெளியே இன்று காலை நடந்த தற்கொலைப் படைத் தாக்குதலில் ஐந்து பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர்.

வடக்கு கொழும்பில் உள்ள வட்டாலா பகுதியில் உள்ள ஹெகிட்டா என்ற இடத்தில் செயின்ட் ஆன்ஸ் கத்தோலிக்க சர்ச் உள்ளது. இங்கு இன்று காலை ஏராளமானோர் பிரார்த்தனைக்காக திரண்டிருந்தனர்.

அப்போது சர்ச்சுக்கு வெளியே தற்கொலைப் படையைச் சேர்ந்த ஒருவர் தனது உடலில் கட்டியிருந்த குண்டை வெடிக்கச் செய்தார்.

இதில் ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டனர். பலர் படுகாயமடைந்தனர். அந்த இடமே போர்க்களம் போல காணப்பட்டது.

காயமடைந்தவர்கள் உடனடியாக தேசிய மருத்துவமனைக்கும், அருகில் உள்ள ரகமா மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டனர்.

காயமடைந்தவர்களில் இருவரது நிலை கவலைக்கிடமாக உள்ளது. இந்த சம்பவத்திற்கு விடுதலைப் புலிகளே காரணம் என ராணுவம் கூறியுள்ளது.

தாக்குதல் நடந்த இடத்தை ராணுவம் முற்றுகையிட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+