தூத்துக்குடி விஐபிக்களுக்கு கள்ளத்துப்பாக்கி சப்ளை!

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: தூத்துக்குடியில் பிடிபட்ட நவீன கைத்துப்பாக்கிகள் நேபாளத்தில் இருந்து கடத்தி வரப்பட்டவை என்றும் கைதான கும்பல் மூலம் ஏற்கனவே இங்குள்ள விஐபிகளுக்கு துப்பாக்கி சப்ளை செய்யப்பட்டுள்ளதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

தூத்துக்குடியில் தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் சைரஸ் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் திருட்டுத்தனமாக துப்பாக்கி விற்கும் கும்பலை சேர்ந்த 4 பேரை கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 5 வெளிமாநில துப்பாக்கிகளையும், தோட்டாக்களையும் கைப்பற்றினர்.

பிடிபட்டவர்களிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதில் துப்பாக்கி விற்கும் தலைவனாக செல்வம் ஈடுபட்டுள்ளான். அவனுக்கு உதவியாக தூத்துக்குடியை சேர்ந்த நிர்மலா என்ற இளம்பெண் இருந்துள்ளார்.

நி்ர்மலாவும், செல்வமும் நேபாளத்தில் இருந்து தனிதனியாக இத்துப்பாக்கிகளை சென்னைக்கு கடத்தி வந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். செல்வம் மீது தூத்துக்குடி, சென்னை போலீசில் பல வழக்குகள் உள்ளன.

துப்பாக்கிகளை தூத்துக்குடியில் உள்ள முக்கிய விஐபிக்களுக்கு கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதற்கு இக்கும்பல் பதுக்கி வைத்திருந்துள்ளது.

மேலும் இக்கும்பல் ஏற்கனவே தூத்துக்குடியில் உள்ள சில முக்கிய விஜபிக்களுக்கு துப்பாக்கிகளை விற்பனை செய்துள்ளதும் தெரிய வந்துள்ளது. இவர்களிடம் துப்பாக்கி வாங்கிய விஐபிக்களின் பட்டியலை போலீசார் ரகசியமாக சேகரித்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+