சென்னையில் மேலும் ஒரு விடுதலைப் புலி கைது
சென்னை: சென்னையில் மேலும் ஒரு விடுதலைப் புலியை கியூ பிரிவு போலீஸார் கைது செய்துள்ளனர்.
சமீபத்தில் கும்மிடிப்பூண்டியில் உள்ள அகதிகள் முகாமில் ஒரு விடுதலைப் புலி இயக்க போராளியை போலீஸார் கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின் பேரில் சென்னையில் விடுதலைப் புலிகளின் ஏஜென்ட் கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில் நேற்று சுவிட்சர்லாந்திலிருந்து வந்த விடுதலைப் புலி போராளியை போலீஸார் கைது செய்தனர்.
இலங்கையைச் சேர்ந்த அவரது பெயர் திலீபன்.
2002ம் ஆண்டு சுவிட்சர்லாந்துக்குப் போனார் திலீபன். பின்னர் அவருக்கும், சில நாட்களுக்கு முன்பு சென்னையில் பிடிபட்ட புலிகளின் ஏஜென்ட் அந்தோணிக்கும் இடையே தொடர்பு ஏற்பட்டது.
இந்த நிலையில், சில சாட்டிலைட் போன்களை திலீபனிடம் கேட்டிருந்தார் அந்தோணி. அதைக் கொடுப்பதற்காக நேற்று சென்னைக்கு வந்தார் திலீபன்.
ஆனால் அந்தோணி கைதானது அவருக்குத் தெரியாது. திலீபன் வருகையை அறிந்திருந்த கியூ பிரிவு போலீஸார், நெற்குன்றத்தில் உள்ள திலீபனின் சித்தப்பா வீட்டில் வைத்து அவரைக் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications