For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

புத்தாண்டை சிறப்புடன் தொடங்கியது சென்செக்ஸ்

By Staff
Google Oneindia Tamil News

BSE
மும்பை: புத்தாண்டு தினமான இன்று மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் உற்சாக ஏற்றத்துடன் தொடங்கியது.

இன்று காலை வர்த்தகம் தொடங்கியவுடனேயே 82 புள்ளிகள் உயர்ந்து, 9729.79 ஆக சென்செக்ஸ் இருந்தது.

தேசிய பங்குச் சந்தையான நிப்டியும், 27.6 புள்ளிகள் உயர்ந்து 2986.75 புள்ளிகளாக இருந்தது.

சாப்ட்வேர் நிறுவனங்களான இன்போசிஸ் டெக்னாலஜிஸ், (0.19%), டிசிஎஸ் (1.11) ஆகியவற்றின் பங்குகள் உயர்ந்து காணப்பட்டன.

அதேபோல ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, ஐசிஐசிஐ வங்கி, டாடா ஸ்டீல், ஸ்டெர்லைட் ஆகியவற்றின் பங்குகளும் உயர்ந்து காணப்பட்டன.

புத்தாண்டு தினத்தில் சென்செக்ஸ் உயர்வுடன் தொடங்கியது பங்குச் சந்தை வட்டாரத்தை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஆனால், ஆண்டின் கடைசி நாளில் நஷ்டம்:

வருடத்தின் கடைசி நாளான நேற்று கடந்த ஆண்டைப் போலவே மிக மோசமாக இருந்தது பங்குச் சந்தை வர்த்தகம்.

துவக்க நேரத்தில் சுமாரான வர்த்தகம் தெரிந்தாலும், பிற்பகலில் டல்லடித்தது. மாலையில் 84 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ் 9631-ல் நிலை கொண்டது. கச்சா எண்ணெய், எரிவாயு தொடர்பான பங்குகள் விலை சரிந்தது. ஆட்டோ மொபைல் மற்றும் மூலதனப் பொருட்களின் பங்குகள் ஒரளவு விலை போயின.

தேசியப் பங்குச் சந்தைக் குறியீட்டெண்ணும் சரிந்து காணப்பட்டது. 21 புள்ளிகள் குறைந்து 2937-ல் நிலைபெற்றது நிப்டி.

இன்றைய வர்த்தகத்தில் அதிக லாபத்தில் கைமாறியது சத்யம் கம்ப்யூட்டர் நிறுவன பங்குகள். வங்கித் துறைபே பங்குகள் அனைத்துமே வீழ்ச்சி கண்டன இன்று.

இந் நிலையி்ல் தான் புத்தாண்டில் சென்செக்ஸ் ஏற்றத்துடன் ஆரம்பித்துள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X