மதுரைக்கு புது டிஐஜி, எஸ்.பி, டி.எஸ்.பி நியமனம்
சென்னை: மதுரை சரக டிஐஜி, புறநகர் மாவட்ட எஸ்.பி. மற்றும் திருப்பரங்குன்றம் டி.எஸ்.பி. ஆகியோர் மாற்றப்பட்டு புதிய அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மதுரை சரக டிஐஜியாக இருந்த கிருஷ்ணமூர்த்தி, எஸ்.பி. மனோகர் ஆகியோரை சமீபத்தில் தேர்தல் ஆணையம் அதிரடியாக இடமாற்றம் செய்தது.
இதையடுத்து புதிய அதிகாரிகள் பட்டியலை தமிழக உள்துறைச் செயலாளர் மாலதி அறிவித்துள்ளார்.
அதன்படி மதுரை சரக டிஐஜியாக தற்போது திண்டுக்கல் சரக டிஐஜியாக பணியாற்றி வரும் அமரேஷ் பூஜாரி நியமிக்கப்பட்டுள்ளார். கிருஷ்ணமூர்த்தி திண்டுக்கல்லுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
மதுரை புறநகர் எஸ்.பியாக சென்னை பூக்கடை துணை ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா நியமிக்கப்பட்டுள்ளார். மனோகர் பூக்கடைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
அதேபோல, திருப்பரங்குன்றம் டி.எஸ்.பி. சுந்தரேசன் மாற்றப்பட்டு அந்த இடத்திற்கு திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் டி.எஸ்.பியாக உள்ள பிரவீன்குமார் அபினவ் நியமிக்கப்பட்டுள்ளார். சுந்தரேசன், முத்துப்பேட்டை டி.எஸ்.பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 3 அதிகாரிகளுமே வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications