அதிகாரிகளை கண்டித்து கருப்புக் கொடி ஏற்றிய கிராமம்
புளியங்குடி: நெல்லை அருகேயுள்ள பந்தப்புளி கோயில் பிரச்சனையில் அதிகாரிகளை கண்டித்து 7 சமுதாய மக்கள் தங்கள் வீடுகளில் கறுப்பு கொடி ஏற்றினர்.
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகேயுள்ள பந்தப்புளி கிராம கண்ணநல்லூர் மாரியம்மன் கோவிலில் சாமி கும்பிடுவது தொடர்பாக தாழ்த்தப்பட்ட மக்களுக்கும், பிற சமுயாத மக்களுக்கும் இடையே பிரச்சனை இருந்ததால் கோயில் பூட்டப்பட்டிருந்தது.
இந்நிலையில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஆதரவாக மார்க்கிஸ்ட் கட்சியினர் ஆலய நுழைவு போராட்டம் நடத்தினர். இப்பிரச்சனையில் முதல்வர் தலையிட்டு உடனடி தீர்வு காண உத்தரவிட்டார். இதையடுத்து தலித் மக்கள் வழிபட அதிகாரிகள் கோயில் பூட்டை உடைத்தனர்.
போலீஸ் பாதுகாப்புடன் கோயிலுக்குள் தலிக் மக்கள் அனுமதிக்கப்பட்டனர். இதற்கு மற்ற சமுதாய மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் கோயிலை திறந்த அதிகாரிகளை கண்டித்து 7 சமுதாய மக்கள் நேற்று தங்கள் வீட்டு வாசல் முன்பு கறுப்பு கொடி ஏற்றி கண்டனம் தெரிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications