மொபைல் கட்டணம் 30 % குறைகிறது!
டெல்லி: மொபைல் போன் நிறுவனங்களிடம் வசூலிக்கும் கட்டணத்தை கணிசமாகக் குறைக்க தொலைத் தொடர்பு ஆணையமான 'டிராய்' முடிவு செய்துள்ளது.
இதனால், மொபைல் போன் சேவை கட்டணங்கள் 30 சதவீதம் வரை குறைய வாய்ப்புள்ளது.
தொலைபேசி நிறுவனங்களைக் கட்டுப்படுத்தும் அமைப்பு மத்திய அரசின் 'டிராய்'.
மொபைல் இணைப்பு வழங்க மொபைல் நிறுவனங்களுக்கு சில கட்டணங்களை விதித்துள்ளது. அதாவது பிஎஸ்என்எல், மொபைல் போனில் இருந்து ஒரு அழைப்பு, வேறு ஒரு நிறுவன மொபைல் போன் இணைப்புக்கு போகிறதென்றால், பி.எஸ்.என்.எல். நிறுவனத்திடம் இருந்து 'கால் டெர்மினேஷன்' கட்டணமாக ஒரு அழைப்புக்கு 30 பைசாவை 'டிராய்' வசூலித்து வருகிறது.
இந்த கட்டணத்தான் இப்போது 13 பைசாவாகக் குறைக்க முடிவு செய்துள்ளது.
இந்த வகையில், உள்ளூர் போன் பேச ஒரு மொபைல் சந்தாதாரர் நிமிடத்துக்கு ஒரு ரூபாய் கட்டணம் செலுத்துகிறார் என்றால், அவர் இந்த கட்டண குறைப்பால் 80 பைசா செலவழித்தால் போதும்.
இதுபோல, தொலைதூர மெபைல் சேவைக்கும் கட்டணத்தை 'டிராய்' குறைக்க திட்டமிட்டுள்ளது. இந்த கட்டணம் 'கேரேஜ்' கட்டணம் என்று அழைக்கப்படுகிறது.
இதை 65 பைசாவில் இருந்து 16 பைசாவாக குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மார்ச் மாதம் முதல் இந்தக் கட்டணக் குறைப்புகள் அமலுக்கு வரும் என்று தெரிகிறது. சாதாரண தொலைபேசிக்கான கட்டணத்தையும் கணிசமாகக் குறைக்கவிருப்பதாக தொலைத் தொடர்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications