ஹமாஸ் தாக்குதல்-பயங்கரவாத செயல்: புஷ்

வானொலி மூலம் புஷ் உரையாற்றியபோது இஸ்ரேலின் தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்தார். அப்போது அவர் கூறுகையில், பயங்கரவாதிகளின் கைகளுக்கு ஆயுதங்கள் போய்க் கொண்டிருக்கின்றன. அது தடுக்கப்பட வேண்டும். அப்படி தடுக்கப்படும் வரை அமைதி பற்றி பேசுவதை ஏற்க முடியாது.
காஸா பகுதியில் முழுமையான போர் நிறுத்தம் ஏற்படுவதற்கு தூதரக அளவிலான முயற்சிகளை அமெரிக்கா மேற்கொண்டு வருகிறது. போர் நிறுத்தம் என்பது ஒருவழிப்பாதையாக இருக்கக் கூடாது. போர் நிறுத்தம் என்று கூறி விட்டு இஸ்ரேல் மீது ராக்கெட் வீசித் தாக்குவது நியாயமல்ல.
இஸ்ரேல் பகுதிகளில் ஹமாஸ் அமைப்பினர் நடத்தி வரும் ராக்கெட் தாக்குதல்கள் பயங்கரவாத செயல்களாகும் என்றார் புஷ்.
ஹமாஸ் ராணுவத் தலைவர் பலி
இந்த நிலையில் இன்று நடந்த இஸ்ரேல் தாக்குதலில், ஹமாஸ் அமைப்பின் ராணுவ பிரிவு தலைவரான அபு ஜக்காரியா அல் ஜமால் என்பவர் உயிரிழந்தார். ஏற்கனவே வியாழக்கிழமை நடந்த தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் முக்கியத் தலைவர்களி்ல் ஒருவரான நிஸார் ரய்யான் என்பவர் தனது குடும்பத்தோடு கொல்லப்பட்டார் என்பது நினைவிருக்கலாம்.
நேற்று இரவு முழுவதும் இஸ்ரேல் விமானங்கள் தொடர்ந்து குண்டு மழை பொழிந்ததால் காஸா நகரமே சுடுகாடு போலாகியுள்ளது.
எங்கு பார்த்தாலும் மரண ஓலங்களும், காயமடைந்தவர்களின் கண்ணீர் அலறல்களுமாக உள்ளன. காஸா நகரின் பெரும்பாலான கட்டடங்கள் இடிந்து பெயர்ந்து போய் விட்டன.
இதற்கிடையே, ஹமாஸ் அமைப்பினரை சமாதானப்படுத்தி சண்டையை நிறுத்த எகிப்து அரசு தூதரக ரீதியிலான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக பாலஸ்தீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக இஸ்ரேலிய படைகள் காஸா பகுதியை சூறையாடி வருகின்றன. படு மோசமாக நடந்து வரும் இந்தத் தாக்குதல்களில் இதுவரை 429க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர். 2000க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
இஸ்ரேல் தரப்பில் நான்கே நான்கு பேர்தான் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஒரு சுறா கோபப்பட்டால் உங்களுக்கு இன்டர்நெட் கிடைக்காது.. ஹாட்ஸ்பாட் சென்னை தான் தெரியுமா -
95% கொசுக்கள் காலி.. கூகுள் உருவாக்கிய புது வகை கொசுக்கள்! உலகை வியக்க வைக்கும் சீக்ரெட் திட்டம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications