கொழும்பில் மீண்டும் குண்டுவெடிப்பு - 3 பேர் காயம்

Subscribe to Oneindia Tamil

Sri Lanka
கொழும்பு: கொழும்பு நகரில் நேற்று மீண்டும் குண்டு வெடித்தது. இதில் 3 பேர் காயமடைந்தனர். ஏராளமான வாகனங்கள் சேதமடைந்தன.

கிளிநொச்சியைப் பிடித்த சந்தோஷத்தில் கொழும்பு, விமானப்பட தலைமையகத்தில் கொண்டாட்டத்தில் வீரர்கள் இருந்தபோது, வெளியே மனித வெடிகுண்டுத் தாக்குதலை புலிகள் நடத்தினர். இதில் 3 பேர் பலியானார்கள். 30 பேர் காயமடைந்தனர்.

இந்த நிலையில் நேற்று முல்லைத்தீவில் ராணுவம் கடும் தாக்குதலை தொடுத்த நிலையில், கொழும்பில் மீண்டும் குண்டுவெடிப்பு நடந்துள்ளது.

பேட்டை, செஞ்சதுக்கம் பகுதியில், வேனில் வைக்கப்பட்டிருந்த குண்டு நேற்று மாலை 5 மணியளவில் வெடித்துச் சிதறியது. இதில் 3 பேர் காயமடைந்தனர். ஏராளமான வாகனங்கள் சேதமடைந்தன.

விடுதலைப் புலிகள்தான் இதற்குக் காரணம் என இலங்கை பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+