பங்கு வர்த்தகம்: துவக்கமே ஜிவ்!!
Subscribe to Oneindia Tamil
மும்பை: மும்பை பங்குச் சந்தையில் இன்று வர்த்தகத்தின் துவக்க நேரத்திலேயே 166 புள்ளிகள் உயர்ந்தது.
இதைத் தொடர்ந்து மீண்டும் 10000 புள்ளிகளைத் தாண்டியுள்ளது சென்செக்ஸ். அனைத்துத் துறைப் பங்குகளிலும் சாதகமான விலைநிலையும் பரிவர்த்தனையும் நடக்கின்றன. பிற்பகலுக்கும் பின்பும் இந்தப் போக்கு தொடருமா தெரியவில்லை.
அதேபோல, தேசிய பங்குச் சந்தை நிப்டியிலும் 27 புள்ளிகள் உயர்ந்துள்ளது.
துவக்க நேர நிலவரம்: செசெக்ஸ்: 10125.07 (+166.85), நிப்டி: 3074.30 (+27.55)
இதர ஆசிய பங்குச் சந்தைகளிலும் இதே போன்ற நிலைதான் காணப்படுகிறது. புத்தாண்டில் பொருளாதார மீட்பு நடவடிக்கைகளில் பல நாடுகளும் தீவிரம் காட்டியிருப்பதன் அறிகுறி இது என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications