மும்பை: பாகிஸ்தானிடம் ஆதாரங்களை அளித்தது இந்தியா
டெல்லி: மும்பைத் தீவிரவாத தாக்குதல் தொடர்பான அனைத்து முக்கிய ஆதாரங்களையம் பாகிஸ்தானிடம் இந்தியா ஒப்படைத்து விட்டதாக வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய பிரணாப் முகர்ஜி, மும்பைத் தாக்குதலில் பாகிஸ்தான் தொடர்புகள் குறித்த அனைத்து முக்கிய ஆதாரங்களையும் பாகிஸ்தானிடம் ஒப்படைத்து விட்டோம்.
அனைத்து உலக நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களுக்கும் மும்பைத் தாக்குதல் தொடர்பாக நான் கடிதம் எழுதியுள்ளேன்.
பாகிஸ்தான் தூதர் ஷாஹித் மாலிக்கை வெளியுறவு அமைச்சகத்திற்கு வரவழைத்து அவரிடம், மும்பைத் தாக்குதல் தொடர்பான ஆதாரங்களும் வழங்கப்பட்டு விட்டது.
பாகிஸ்தான் தான் அளித்த உறுதிமொழிகளை நிறைவேற்ற அவசர கதியில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தீவிரவாத மிரட்டலை ஒடுக்க உலக நாடுகள் ஒருங்கிணைய வேண்டும் என நான் எதிர்பார்க்கிறேன், விரும்புகிறேன் என்றார்.
வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு வரவழைக்கப்பட்ட ஷாஹித் மாலிக்கிடம், மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் எஸ்.எஸ்.மேனன் ஆதாரங்களை ஒப்படைத்தார்.
மேலும் இந்தியாவில் தங்கியுள்ள அனைத்து நாட்டு தூதர்களுக்கும் மும்பை தாக்குதல் தொடர்பான அனைத்து விவரங்களும் இன்னும் 24 மணி நேரத்தில் தெரிவிக்கப்படவுள்ளதாகவும் முகர்ஜி தெரிவித்துள்ளார்.
முகம்மது அஜ்மல் கஸாப்பிடம் நடந்த விசாரணை குறித்த விவரங்கள், பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத கட்டமைப்புகள், மும்பைத் தாக்குதலில் எந்த வகையில் தொடர்பு கொண்டிருக்கின்றன என்பதற்கான ஆதாரம், மும்பையில் தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள், கருவிகள் உள்ளிட்டவற்றின் மூலம் தெரிய வந்துள்ள பாகிஸ்தானிய தொடர்புகள் குறித்த விவரங்களை பாகிஸ்தானிடம் இந்தியா ஒப்படைத்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், அமெரிக்காவிடம் இந்த ஆதாரங்கள் நேரில் ஒப்படைக்கப்படவுள்ளதாகவும் வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications