பெங்களூர் இன்போசிஸ், விப்ரோ, கேப்ஜெமினி, அக்சென்சர், சாப்ட்வேர் நிறுவனங்களுக்கு குண்டு மிரட்டல்

இந்த கட்டடங்களை குண்டு வைத்து தகர்க்கப் போவதாக அந்த மெயில்களில் கூறப்பட்டுள்ளது. கடந்த வெள்ளி, சனிக்கிழமைகளில் வந்த இந்த மிரட்டல் குறித்து அந்த நிறுவனங்கள் உடனே காவல்துறையிடம் தகவல் தெரிவித்தாலும் வெளியில் சொல்லவில்லை.
இதனால் நேற்று தான் மாலை தான் இந்த மிரட்டல் வந்த விவரமே வெளியானது.
மொத்தத்தில் இந்த 6 நிறுவனங்களுக்கும் 15க்கும் மேற்பட்ட மெயில்கள் வந்துள்ளன. மேலும் தொலைபேசியில் பேசிய ஒரு நபரும் இதையே சொல்லி மிரட்டியுள்ளான்.
இதையடுத்து பெங்களூரில் காவல்துறை உயர் அதிகாரிகளின் கூட்டம் நடந்தது. அதில் இந்த மிரட்டல் குறித்து விவாதிக்கப்பட்டதோடு இந்த நிறுவன கட்டடங்களுக்கு பாதுகாப்பு வழங்க முடிவு செய்யப்பட்டது. மேலும் அந்த நிறுவனங்களும் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன.
மிரட்டல் வந்துள்ள ஒரு மெயிலில், நீங்கள் யு டியூப் இணையத் தளத்தை பிளாக் செய்துவிட்டால் மட்டும் எங்கள் தாக்குதலில் இருந்து தப்பிவிட முடியாது என்று கூறப்பட்டுள்ளது. எதற்காக யு டியூப்பை இதில் இழுத்தனர் என்று தெரியவில்லை.












Click it and Unblock the Notifications