சீமானுக்கு மீண்டும் ஜாமீன் மறுப்பு
Subscribe to Oneindia Tamil
ஈரோடு: விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பேசியதாக கூறி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள இயக்குநர் சீமான் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை ஈரோடு கோர்ட் மீண்டும் தள்ளுபடி செய்து விட்டது.
விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசியதாக கூறி சீமான், பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே இவர்கள் இருவரும் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தனர். ஆனால் அதை ஈரோடு மாஜிஸ்திரேட் கோர்ட் நிராகரித்து விட்டது.
இதையடுத்து மீண்டும் சீமான் சார்பில் ஜாமீன் கோரி மனு செய்யப்பட்டது. இந்த மனுவையும் ஈரோடு கோர்ட் இன்று நிராகரித்து உத்தரவிட்டது.












Click it and Unblock the Notifications