இந்து பிரமுகர்களை கொல்ல சதி-நெல்லையில் ஐவர் கைது

Subscribe to Oneindia Tamil

நெல்லை: நெல்லை மாவட்டம் புளியரை சப்-இன்ஸ்பெக்டர் முருகானந்தம் மற்றும் போலீசார் கடந்த 26ம் தேதி பண்பொழி தைக்கா முக்கு பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த மேலப்பாளையத்தை சேர்ந்த சேட் பாதுஷா, பெரிய குப்தா பள்ளிவாசல் தெருவை சேர்ந்த அபுதாகீர் ஆகியோரை சந்தேகத்தின் பேரில் சோதனையிட்டனர். அவர்கள் வெடிகுண்டுகள் தயாரிக்க உதவும் ரசாயான பொருட்கள் வைத்திருந்தனர்.

இதையடுத்து அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் இந்து அமைப்பை சேர்ந்த சில முக்கிய பிரமுகர்களை கொலை செய்தவற்காக மேலப்பாளையத்தை சேர்ந்த கி்ச்சான்புகாரி கேட்டு கொண்டதற்கு இணங்க மேக்கரையை சேர்ந்த கோபால் என்பவரிடம் இருந்து வெடிகுண்டு தாயரிக்க உதவும் ரசாயான பொருட்களை வாங்கி வந்ததாக அவர்கள் கூறினர்.

இதையடுத்து மேலப்பாளையத்தை சேர்ந்த அபுதாகீர், சேட் பாதுஷா, கீச்சான் புகாரி, முல்லன், செய்யதலி, மேக்கரையை சேர்ந்த சாதிக் அலி, ஆகிய 5 பேர் மீது வழக்கு பதிந்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.

நெல்லை எஸ்பி ஆஸ்ரா கர்க் பரிந்துரையின் பேரில் இவர்கள் 5 பேரையும் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டர் பிரகாஷ் உத்தரவு பிறப்பித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+