மலேசியாவை கண்டித்து இ.முன்னணி போராட்டம்
சென்னை: மலேசியாவில் இந்துக்கள் கொடுமைபடுத்தப்படுவதை கண்டித்து சென்னையில் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் மாநாடு நடைபெறும் போது இந்துமுன்னணி ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளது.
இது குறித்து அதன் அமைப்பாளர் ராம. கோபாலன் வெளியிட்டுள்ள அறிக்கை:
மலேசியாவில் இந்துக்களுக்கு அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுகின்றன. கல்வி கற்கவும், வியாபாரம் செய்வதற்கும், தொழில் தொடங்குவதற்கும் சுதந்திரம் இல்லை. தமிழர்கள் குறிப்பாக, இந்துக்கள் மூன்றாம் தர குடிமக்களாக நடத்தப்படுகிறார்கள். இந்துக்களிடம் பாரபட்சம் காட்டப்படுகிறது.
தன்மானத்துடனும், பாதுகாப்புடனும் வாழ இயலாத நிலையை மலேசிய அரசாங்கம் உருவாக்கியிருக்கிறது. இத்தனைக்கும் மலேசிய பொருளாதார வளர்ச்சியில் இந்துக்களின் பங்கு மிகக் கணிசமானது என்பதை உலகம் அறியும்.
மலேசியா வளர்ச்சிக்காக ரத்தத்தையும், கண்ணீரையும், வியர்வையையும் சிந்திய இந்துக்கள் கொடுமைப்படுத்தப்படுவதை கண்டித்து வெளிநாட்டில் வாழும் இந்தியர்களுக்கான மாநாடு சென்னையில் நடைபெறும்போது இந்து முன்னணி ஆர்ப்பாட்டம் நடத்தும்.
கட்சி உணர்வுகளுக்கு அப்பாற்பட்டு மலேசிய தமிழர்களுக்காக அனைவரும் இதை ஆதரிக்க வேண்டும்.
மத்திய அரசு, மலேசியா இந்துக்களை பாதுகாக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மலேசியா இந்துக்களுக்காக போராடிய ஒரே காரணத்திற்காக கொடுஞ்சிறையில் அடைக்கப்பட்டுள்ள 'ஹிண்ட்ராப்' தலைவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.
மலேசியா அமைச்சர் சுப்பிரமணியம் சிறையில் இருப்பவர்கள் விரைவில் விடுதலை செய்யப்படுவார் என அறிவித்திருக்கும் வாக்குறுதி நம்பத் தகுந்ததாக இல்லை. வெறும் வாக்குறுதிக்கு பதிலாக உருப்படியான நடவடிக்கைகளை மலேசியா அரசாங்கம் எடுக்க வேண்டுமென்று நூறு கோடி இந்துக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
இந்து முன்னணி ஆர்ப்பாட்டம் நடத்தும் இடம் விரைவில் அறிவிக்கப்படும் என்று கூறியுள்ளார்.
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications