திருமங்கலத்தில் நாளை வாக்குப் பதிவு
திருமங்கலம்: திருமங்கலத்தில் நாளை வாக்குப் பதிவு நடப்பதையொட்டி இந்த தொகுதிக்குள் வெளி மாவட்டத்தில் இருந்து வரும் 15 பாதைகளிலும் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு தீவிர வாகன சோதனைகள் நடந்து வருகின்றன.
இங்கு நாளை காலை 7 மணிக்கு ஓட்டுப் பதிவு தொடங்குகிறது. மாலை 5 மணிக்கு வாக்குப் பதிவு முடிவடையும். வாக்குச் சாவடிக்கு 100 மீட்டர் தூரத்துக்கு அப்பால் தான் அரசியல் கட்சியினர் இருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
அனைத்து வாக்குச் சாவடிகளிலும் துப்பாக்கி ஏந்திய மத்திய துணை ராணுவ படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். தொகுதி முழுவதும் துணை ராணுவத்தினர், தேர்தல் அதிகாரிகள் வாகனங்களில் ரோந்து வருவர்.
மொத்தம் 500 துணை ராணுவத்தினரும், 5,000 போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்தத் தொகுதியின் ஓட்டுகள் மதுரை மருத்துவக் கல்லூரியில் எண்ணப்படவுள்ளன.
நாளை பொது விடுமுறை:
இடைத் தேர்தலை முன்னிட்டு திருமங்கலம் தொகுதிக்கு நாளை பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் தொகுதியில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மூடப்படும்.
'மப்டி'யில் திரியும் 'கரைகள்':
பல கட்சியைச் சேர்ந்தவர்கள் முக்கிய தலைவர்கள் பலர் தொகுதிக்கு உட்பட்ட பல கிராமங்களில் உள்ள வீடுகளில் கூட்டம் கூட்டமாக தங்கியுள்ளனர்.
ஆனால், வாக்குப்பதிவை முன்னிட்டு வெளியூர் பிரமுகர்கள் மற்றும் வாக்காளர்கள் அல்லாதவர்களை தொகுதியில் இருந்து காவல்துறை வெளியேற்றி வருகிறது.
இந்த கெடுபிடியால் பல அரசியல் கட்சியினர் வழக்கமாக அணியும் கரை வேட்டி மற்றும் வெள்ளைச் சட்டையை விட்டு விட்டு உள்ளூர்வாசிகளைப் போல லுங்கி, சாதாரண சட்டையுடன் வலம் வருகின்றனர்.
பஸ்கள் பாதியில் நிறுத்தம்-மக்கள் அவதி:
இதற்கிடையே திருமங்கலம் செல்லும் பஸ்கள் பாதியில் நிறுத்தப்பட்டதால் பொது மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
தேர்தலையொட்டி பஸ்கள் நகருக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மதுரையில் இருந்து திருமங்கலம் நகரத்திற்கு வரும் பஸ்கள் மறவன்குளம் என்ற இடத்திலே நிறுத்தப்படுகின்றன.
இதனால் மதுரையில் இருந்து திருமங்கலம் வருபவர்களும், திருமங்கலம் மற்றும் சுற்றுப்பகுதியில் இருந்து மதுரை செல்பவர்களும் மறவன் குளம் வரையே பயணம் செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
-
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல்












Click it and Unblock the Notifications