சத்யம் கீழ் இயங்கும் 8 நிறுவனங்களிலும் விசாரணை - அமைச்சர்

Subscribe to Oneindia Tamil

புதுடெல்லி: சத்யம் நிறுவனத்தின் கீழ் இயங்கும் 8 நிறுவனங்களின் நிர்வாகம் மற்றும் கணக்கு வழக்குகளை கம்பெனி சட்டப்படி மறு ஆய்வு செய்ய வேண்டும் என மத்திய கம்பெனிகள் விவகாரத்துறை அமைச்சர் பிரேம்சந்த் குப்தா கூறியுள்ளார்.

சத்யம் விவகாரத்தில் இதுவரை எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளை விளக்க பிரதமரைச் சந்திக்கச் செல்லும் முன் பிசி குப்தா நிருபர்களிடம் கூறியதாவது:

இந்த வழக்கில் எந்தவித பாரபட்சமும் இருக்காது. சத்யம் நிறுவனத்தின் வங்கிக் கணக்கு வழக்கு விபரங்கள் காணாமல் போனதாகக் கூறப்பட்டுள்ளது. அவற்றை சம்பந்தப்பட்ட வங்கிகளிடமிருந்து நமது புலனாய்வு ஏஜென்ஸிகள் கைப்பற்றும்.

குற்றவாளிகள் ஒருவரையும் தப்பவிட மாட்டோம். அரசியல் குறுக்கீடுகளையும் அனுமதிக்க மாட்டோம். இன்னும் 7 நாட்களுக்குள் புதிய இயக்குநர்கள் நியமிக்கப்பட்டு, முதல்கூட்டமும் நடந்துவிடும்.

சத்யம் நிறுவன ஆடிட்டர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படு்ம். சார்டட் அக்கவுண்டன்ட் அமைப்பிலிருந்தே அவர்கள் நீக்கப்படுவார்கள்.

சத்யம் நிறுவனத்தின் கீழ் 8 நிறுவனங்கள் உள்ளன. இப்போது இவற்றின் கணக்குகள் மற்றும் நிர்வாகம் குறித்தும் விசாரிக்கப்படும்.

சத்யம் மோசடிக்காக இந்திய சாப்ட்வேர் துறையை பலி கொடுக்க முடியாது என்றார் குப்தா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+