மும்பை லீலா ஹோட்டலுக்கு தீவிரவாதிகள் மிரட்டல்
மும்பை: மும்பை சர்வதேச விமான நிலையம் அருகே உள்ள ஹோட்டல் லீலாவுக்கு தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளனர். இதையடுத்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த வாரம் இதுதொடர்பாக இரு இ மெயில்கள் லீலா ஹோட்டல் நிர்வாகத்திற்கு வந்துள்ளது. ஹோட்டலை வெடிகுண்டு வைத்துத் தகர்க்கப் போவதாக அதில் மிரட்டப்பட்டுள்ளதாக போலீஸார் இன்று தெரிவித்தனர்.
கடந்த வெள்ளிக்கிழமையும், சனிக்கிழமையும் இந்த மெயில்கள் வந்துள்ளன. இதையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் ஹோட்டல் வளாகம் முழுவதையும் தீவிரமாக சோதனையிட்டனர். ஆனால் குண்டு எதுவும் சிக்கவில்லை.
எனக்கு 10 லட்சம் டாலர் பணம் தர வேண்டும். இல்லாவிட்டால் குண்டு வைப்பேன் என மெயில் அனுப்பிய நபர் தெரிவித்துள்ளதாக துணை போலீஸ் கமிஷனர் நிஸார் தம்போலி தெரிவித்தார்.
இது வெற்று மிரட்டலாக இருக்கும் என போலீஸார் சந்தேகப்பட்டாலும் கூட, சமீபத்திய தீவிரவாதத் தாக்குதல் அனுபவத்தால், ஹோட்டலுக்கு பாதுகாப்பை அதிகரித்துள்ளனர்.
-
90% பேருக்கு தெரியாது.. கலர் கலராக இருக்கும் ரயில்கள்.. ஒவ்வொன்றுக்கும் என்ன அர்த்தம் தெரியுமா! -
இந்தியாவில் 'வேலைவாய்ப்பு நெருக்கடி'.. கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் அறிய வேண்டிய கசப்பான உண்மை -
அனைத்து அத்தியாவசிய மருந்துகளின் விலையும் உயர்கிறது.. ஏப்ரல் 1 முதல் அமல்.. அதிர்ச்சி அறிவிப்பு -
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல -
"இந்தியா எங்கள் நண்பன்! ஹார்முஸை தாராளமாக கடக்கலாம்.." அனுமதி தந்த ஈரான்! உற்று பார்க்கும் அமெரிக்கா -
இனி பெட்ரோல் பங்க், சூப்பர் மார்கெட்களிலும் கூட மது கிடைக்கும்.. புதிய கலால் கொள்கை வெளியீடு












Click it and Unblock the Notifications