ஈழத் தமிழர்களின் பொங்கல் புறக்கணிப்பு

Subscribe to Oneindia Tamil

Sri Lankan Map
வன்னி: அமெரிக்கா, ஐரோப்பா, கனடா, ஆஸ்திரேலியா ஆகிய பகுதிகளில் வாழும் ஈழத் தமிழர்கள், வன்னியில் தமிழர்கள் பட்டு வரும் துயரத்தை மனதில் கொண்டு இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதில்லை என்று முடிவு செய்துள்ளனர்.

பொங்கல் தொடர்பான அனைத்து நிகழ்ச்சிகளையும் நிறுத்தி வைப்பதாக அவர்கள் அறிவித்துள்ளனர்.

முல்லைத்தீவு பகுதியை பிடிக்கும் நோக்கில் இலங்கைப் படைகள் முழு தீவிரத்துடன் போர் தொடுத்து வரும் நிலையில், வன்னியில் தமிழர்கள் மிகக் கொடுமையான நிலையில் இருப்பதால் பொங்கலைக் கொண்டாடுவதில்லை என்று அவர்கள் முடிவு செய்துள்ளனராம்.

இதுகுறித்து இந்த நாடுகளில் வாழும் ஈழத் தமிழர்களின் பல்வேறு சங்கங்கள் வெளியிட்டுள்ள இ மெயில் செய்தியில், தமிழகத்திலிருந்து வரும் நெருக்குதல் மூலம் மட்டுமே இலங்கைப் படையினரிடம் சிக்கி வன்னித் தமிழர்கள் அழிவதைக் காக்க முடியும்.

இலங்கை அரசு இனப்படுகொலையை முழு மூச்சாக செய்து வருகிறது. இந்திய அரசின் ஒப்புதலோடு அதை செய்து வருகிறது இலங்கை அரசு.

சர்வதேச சமுதாயம் தமிழர்களுக்கு உதவும் என்ற சிறிய நம்பிக்கையும் கூட இப்போது தகர்ந்து போய் விட்டது.

வன்னியில் தமிழ் சொந்தங்கள் மிகவும் மோசமான நிலையில் இருக்கும் சூழ்நிலையில் பொங்கல் பண்டிகையை கொண்டாடுவது பொருத்தமாக இருக்காது என்பதால், பொங்கல் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழர்கள் நிறுத்தி வைக்கிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+