For Daily Alerts
Just In
திமுக எம்.பி. வசந்தி ஸ்டான்லியின் கணவர் மரணம்
சென்னை: திமுக ராஜ்யசபா எம்.பி. வசந்தி ஸ்டான்லியின் கணவர் ஸ்டான்லி ராஜன் திடீரென மரணமடைந்தார்.
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பைச் சேர்ந்தவர் வசந்தி ஸ்டான்லி. இவர் ராஜ்யசபா திமுக எம்.பியாக உள்ளார். இவரது கணவர் ஸ்டான்லி ராஜன். 46 வயதான இவர், நெல்லையில் மருந்து நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தார்.
திடீரென அவருக்கு உடல் நலம் பாதிக்கப்படவே சென்னைக்குக் கொண்டு வரப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று மரணமடைந்தார்.
இதையடுதத்து அவரது உடல் நெல்லை கொண்டு போகப்பட்டது. இன்று அவரது இறுதிச் சடங்குகள் நடைபெறவுள்ளன.
Comments
Story first published: Thursday, January 15, 2009, 11:25 [IST]