விடுதலைப் புலிகளின் 5வது ரன்வே சிக்கியது
கொழும்பு: விடுதலைப் புலிகளின் 5வது ரன்வேயை ராணுவம் பிடித்துள்ளது. இந்த ரன்வே அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் உள்ளது.
முல்லைத்தீவை பிடிக்கும் முயற்சியில் ராணுவம் தீவிரமாக உள்ளது. இந்த நிலையில், கிளிநொச்சி அருகே உள்ள இரணமடு குளப் பகுதியில், கிழக்கில், ஒரு ரன்வேயை ராணுவம் கண்டுபிடித்துள்ளது. இது அடர்ந்த வனப்பகுதியில் உள்ளதாக அது தெரிவித்துள்ளது.
இது ராணுவம் பிடித்துள்ள ஐந்தாவது ரன்வே ஆகும். புதிதாக பிடிபட்டுள்ள ரன்வே 50 மீட்டர் அகலம், 100 மீட்டர் நீளம் கொண்டது. ரன்வேக்கு அருகே மிகப் பெரிய பாதாள சுரங்கம் உள்ளது. மேலும் தடுப்பரண்களும் உள்ளன. எளிதில் தப்பி ஓடக் கூடிய வகையிலான ரகசியப் பாதைகளும் உள்ளன.
49 புலிகளின் உடல்கள் அடக்கம்
இதற்கிடையே, ராணுவத்துடன் மோதி உயிரிழந்த 49 விடுதலைப் புலிகளின் உடல்களை ராணுவமே அடக்கம் செய்துள்ளது. கடும் சண்டை நடந்து வருவதால் உடல்களை செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைக்க முடியாததால், உடல்களை ராணுவமே அடக்கம் செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications