'தங்கமான' ஆட்டோ டிரைவர்
திருநெல்வேலி: செங்கோட்டை கண்ணுபுளிமெட்டை சேர்ந்த முருகையாவின் மனைவி ஜானகி. பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகி்ச்சை பெற்று வரும் தனது தாயாரை பார்க்க வந்த ஜானகி காப்பி வாங்க அந்த பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு சென்றார்.
அப்போது அவர் கழுத்தில் அணிந்திருந்த 30 கிராம் தங்க சங்கிலி எதிர்பாராவிதமாக ரோட்டில் அறுந்து விழுந்தது. இது குறித்து ஜானகி பாளையங்கோட்டை போலீசில் புகார் செய்தார்.
இந்நிலையில் பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரி அருகே ரோட்டில் நடந்து சென்ற ஆட்டோ டிரைவர் மார்ட்டின் ஆனந்தராஜ் என்பவர் ரோட்டில் கிடந்த 30 கிராம் தங்க சங்கிலியை கண்டெடுத்து போலீசில் ஒப்படைத்தார்.
போலீசாரின் விசாரணையில் தங்க சங்கிலி ஜானகிக்கு உரியது என்பது உறுதியானது. இதையடுத்து தங்க சங்கிலி அவரிடம் ஓப்படைக்கப்பட்டது.
திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் மஞ்சுநாதா, தங்கத்துக்கு ஆசைப்படாமல் நேர்மையுடன் செயல்பட்ட ஆட்டோ டிரைவர் மார்டின் ஆனந்தராஜை அழைத்து பாராட்டினார். உண்மையில் இவர் 'தங்கமான' ஆட்டோ டிரைவர் தான்.












Click it and Unblock the Notifications