மூடு பனி-டெல்லியில் விமான சேவை முடக்கம்
கடந்த சில நாட்களாக மூடுபனி டெல்லியை உறைய வைத்து வருகிறது. இதனால் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
நேற்று மட்டும் 50 விமானங்கள் தாமதமாக புறப்பட்டுச் சென்றன. 15 விமானங்கள் ரத்து செய்ய்ப்பட்டன. இன்றும் அதேநிலை தான் நீடித்தது.
ஓடுபாதை தெளிவாக தெரியாததை அடுத்து 30 விமானங்கள் கிளம்ப தாமதமாகின. 6 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
கடந்த டிசம்பர் 29ம் தேதிக்கு பின் இன்று வரை மொத்தம் 900க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாகி உள்ளன. 150 விமானங்கள் ரத்து செய்ய்ப்பட்டுள்ளன.
இது குறித்து விமான நிலைய அதிகாரி ஒருவர் கூறுகையில், நேற்று இரவு உண்டான மூடுபனி விமான சேவைகளை அதிகம் பாதித்துவிட்டது. இதனால் மஸ்கட்டில் இருந்து காலை 3.15 மணி அளவில் டெல்லி வந்து இறங்க வேண்டிய விமானம் ஓடுதளம் முற்றிலும் புலப்படாத நிலையில் ஜெய்ப்பூருக்கு மாற்றி விடப்பட்டது என்றார்.