For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அலைமோதிய கூட்டம்

By Sridhar L
Google Oneindia Tamil News

திருவள்ளூர்: ஆசிரியர் பயிற்சியில் தேர்ச்சி பெற்றவர்கள் தங்கள் பெயரை பதிவு செய்ய நேற்று இரவு முதலே திருவள்ளூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் திரண்டதால் பெரும் கூட்டம் அலைமோதியது.

ஆசிரியர் பயிற்சி முடிவுகள் நேற்று முன்தினம் வெளியாயின. இதில் தேர்ச்சி பெற்றவர்கள் தங்கள் பெயரை வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து சீனியாரிட்டி பெற (பதிவு மூப்பு) ஆர்வத்துடன் திரண்டனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 8 தாலுகா பகுதிகளில் தேர்ச்சி பெற்ற அனைவரும் போட்டி போட்டுக் கொண்டு ஒரே நாளில் பதிவு செய்ய வந்ததால் பெரும் கூட்டம் கூடியது. இவர்கள் நேற்று இரவு முதலே திருவள்ளூர் சி.வி.நாயுடு சாலையில் உள்ள மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் முன்பு காத்து கிடந்தனர்.

நூற்றுக்கணக்கான பெண்கள் தங்கள் பெற்றோர், கணவர் மற்றும் கைக்குழந்தைகளுடன் கொட்டும் பணியில் காத்துக் கிடந்தனர். கூட்டம் அதிகமானதை போலீசார் குவிக்கப்பட்டு கூட்டத்தை ஒழுங்குப்படுத்தினர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X